தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொசுக்களால் பரவும் இந்த தொற்று சில நேரங்களில் உயிருக்கே உலைவைக்கும் ஆபத்தான கட்டத்தை எட்டக்கூடும் என்பதால், மக்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என […]