தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEG திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ ,மானியத்தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ […]

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பழைய குவாட்ரஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிவேல். இவருடைய மனைவி சாந்தி(56) இவருடைய மகன் விஜய் ஆனந்த் (35) இவர்கள் இருவரும் கடந்த நான்காம் தேதி மாலை வீட்டிலேயே நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த வழக்கு குறித்து அதியமான் கோட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பொறியியல் பட்டதாரியான விஜய்ஆனந்த் அவருடைய நண்பர்கள் ஆன பள்ளி பாளையத்தை சேர்ந்த […]

தமிழ்நாடு அரசின்‌ வேளாண்மை – உழவர்‌ நலத்துறை உள்ளிட்ட 13 அரசு துறைகளின்‌ திட்டங்களில்‌ விவசாயிகள்‌ பயன்பெபறும்‌ வகையில்‌ வேளாண்‌ அடுக்கு திட்டம்‌ செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக GRAINS என்ற வலைதளத்தில்‌ விவசாயிகளின்‌ விவரங்கள்‌ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ விவசாயிகள்‌ அனைத்து பயன்களுக்கும்‌ ஒரே இடத்தில்‌ பதிவு செய்து அரசின்‌ உதவிகளை பெறமுடியும்‌. விவசாயிகள்‌ ஒவ்வொரு முறையும்‌ அரசின்‌ நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்‌ போது ஆவணங்கள்‌ சமர்பிக்க வேண்டியதில்லை. […]

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, (மகளிர்‌ திட்டம்‌) மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌, மாவட்ட வழங்கல்‌ மற்றும்‌ விற்பனை சங்கத்தின்‌ மூலம்‌ தருமபுரி மாவட்ட மகளிர்‌ சுய உதவிக்குழுக்களின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்‌ வகையில்‌ தங்கள்‌ பொருட்கள்‌ மற்றும்‌ தயாரிப்பு பொருட்களை மாவட்டத்தின்‌ சிறப்பு வாய்ந்த இடங்களில்‌ மதி எக்ஸ்பிரஸ்‌ வண்டியின்‌ மூலம்‌ விற்பனை செய்து கொள்ள மாவட்டத்திற்கு […]

தருமபுரியில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டம்‌, தருமபுரி வருவாய்‌ கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களைசார்ந்த விவசாயிகளின்‌ சூறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ ஒவ்வொரு மாதமும்‌ முதல்‌ வாரத்தில்‌ வெள்ளிக்கிழமை அன்று நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தியதற்கிணங்க, இன்று காலை 11 மணியளவில்‌ தருமபுரி வருவாய்‌ கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச்‌ சார்ந்த விவசாயிகளின்‌ குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள்‌ சூறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ தருமபுரி வருவாய்‌ கோட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ […]

கோவிட்‌-19 பெருந்தொற்று பரவலால்‌ வெளிநாட்டில்‌ வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர்‌ தமிழர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்கும்‌ நோக்கத்துடன்‌ தமிழ்நாடு அரசு “புலம்பெயர்ந்தோர்‌ வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌” என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ வெளிநாடுகளில்‌ சூறைந்தது 2 ஆண்டுகள்‌ பணிபுரிந்துகோவிட்‌-19 பெருந்தொற்று பரவலால்‌ வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள்‌சுயதொழில்‌ தொடங்க மானியத்துடன்‌ இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம்‌. அவர்கள்‌ கோவிட்‌-19 பெருந்தொற்று பரவலினால்‌ 04.01.2020 அன்று அல்லது அதற்கு […]

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இளைஞர்களுக்கு பயனுள்ள வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கும்‌ தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கிடவும்‌, 2023-ம்‌ ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள ஸ்ரீ குமர குரு பாலிடெக்னிக்‌ கல்லூரி வளாகத்தில்‌ அரூர்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சியில்‌ 07.06.2023 வரை சேர்க்கை நடைபெற்று வருகிறது. வயர்மேன்‌ பிரிவிற்கு 8-ம்‌ வகுப்பிலும்‌, ரெப்ரிஜிரேசன்‌ & AC டெக்னீசியன்‌,பிட்டர்‌, மெக்கானிக்‌ ஆட்டோபாடி ரிப்பேர்‌ […]

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்‌ ஓர்‌ அரசு நிறுவனம்‌ ஆகும்‌. இதன்‌ மூலம்‌ அனைத்து கிராம ஊராட்சிகளின்‌ கிராம சேவை மையம்‌ மூலம்‌ 1 GBPS வேகத்தில்‌ இணையதள இணைப்பு அனைத்து கிராமங்களுக்கும்‌ வழங்கப்பட உள்ளது. அதிவேக இணைய சேவை மூலம்‌ பொதுமக்களுக்கு வருவாய்த்‌ துறையில்‌ பெறப்படும்‌ சான்றிதழ்கள்‌ உடனடியாக கிடைக்கவும்‌, பொது விநியோக கடைகளில்‌ பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்‌ […]

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கும்மனூர் அடுத்துள்ள சூடனூர் கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் நவீன்(30) கட்டிடம் மேஸ்திரி ஆன இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சட்ட விரோதமாக மின்வேலியை அமைத்திருக்கிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை மையல் பகுதிக்கு சென்ற நதியின் எதிர்பாராத விதமாக மின்வெளியில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் […]

கோடைகால விடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்‌, தருமபுரி பிரிவுசார்பாக 01.05.2023 முதல்‌ 15.05.2023 வரை மாவட்ட விளையாட்டரங்கம்‌, தருமபுரியில்‌ தடகளம்‌, கால்பந்து, ஹாக்கி, வாலிபால்‌ ஆகிய விளையாட்டுக்களில்‌ கோடைகால பயிற்சி முகாம்‌ நடைபெறவுள்ளது. பயிற்சி முகாம்‌ காலை 6.30 மணி முதல்‌ 8.30 மணி வரையிலும்‌,மாலை 4.30 மணி முதல்‌ 6.30 வரையிலும்‌ நடைபெறும்‌. […]