திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் உமாராணி(42). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் இருக்கின்றனர். கணவர் உயிரிழந்த நிலையில், கோவையில் தங்கி அவர் வேலை பார்த்து வந்தார். இத்தகைய நிலையில், பெயிண்டராக வேலை பார்க்கும் சிதம்பரத்தை சேர்ந்த கணேசன்( 30) என்பவருடன் உமாராணிக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. கணேசனுக்கும், உமாராணிக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததால் உமாராணி கோபித்துக் கொண்டு, அவருடைய சொந்த […]
dindukkal
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்ப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சக்கிலியான் கொடையைச் சேர்ந்தவர் கண்ணன்( 55). விவசாயியான இவர், மாடுகளை வாங்கி விற்பனை செய்து வந்தார் இவர் நேற்று முன்தினம் படுகாயங்களுடன் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்தார். இது தொடர்பாக சாணார்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து அவருடைய உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத […]
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் தார்பாய் முருகன் மற்றும் ரமேஷ் உள்ளிட்ட இருவரும், இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த இருவருக்குள் ஏற்பட்ட மோதலால் கடந்த 1998 ஆம் வருடம் திருமங்கலம் அருகே ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திண்டுக்கல் ஆர் வி நகரை சேர்ந்த பாலன் என்பவரின் மகன் ரமேஷ்குமார் (47) என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது செக்கானூரணி காவல்துறையினர் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் கனி ராஜா (55). இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த 7ம் தேதி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அவருடைய மனைவியுடன் நாயுடுபுரம் பகுதியில் இருக்கின்ற அப்துல் கனிராஜாவுக்கு சொந்தமான விடுதியில் 2 அறைகள் எடுத்து தங்கி இருக்கின்றனர். அப்போது […]
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தெற்கு விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி வீரையன் (35) இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அபிராமி(25). இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், வீரய்யன் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் முன்பு ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த வத்தலகுண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் வீரய்யனை அவருடைய மனைவி தான் […]
வழக்கமாக ஏப்ரல், மே உள்ளிட்ட மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் விடுமுறையும் விடப்பட்டு விடுவதால் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்குவார்கள் அங்கு சென்று விடுமுறையை கழித்து அதன் பிறகு கோடையின் வெப்பம் சற்று தணிந்த பிறகு சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக வீடு திரும்புவார்கள். ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக உள்ளது. அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார் உதயகுமார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் பழனி மாநகரில் உள்ள அண்ணாநகர் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மகளும், மனைவியும் சென்னைக்கு சென்று விட்டதால் இவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதிகாலை சமயத்தில் இவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் தாக்கி கட்டி போட்டுள்ளனர். ஆகவே மருத்துவரை கட்டி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதிக்கு அருகில் செந்துறை என்ற ஊர் அமைந்துள்ளது. இதற்கு அருகே ரங்கைய சேர்வைக்காரன் பட்டி என்ற கிராமத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். பெரியம்மாலுக்கு 65 வயதாகும் நிலையில் அவர் வீட்டிற்கு எதிரில் இருந்த கருவேலம் காட்டில் கடந்த பிப்ரவரி பதினொன்றாம் தேதி கொல்லப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இந்த கொலை சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நகரை சேர்ந்தவர் அப்பாஸ் (22) என்ற இளைஞர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கடைவீதி பகுதியில் செருப்பு கடை ஒன்றை இவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தவறான அழைப்பின் மூலமாக தொலைபேசியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும் அவர் தொடர்ச்சியாக அந்த இளைஞருக்கு வாட்ஸ் அப் மூலமாக குறுந்தகவலை அனுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது […]
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியை அடுத்துள்ள கண்ணுமேக்கிப் பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (38) பெயிண்டராக வேலை பார்த்து வருகின்றார். அதே பகுதியைச் சார்ந்த மகேஸ்வரி (30) என்ற பெண்ணின் கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்ட நிலையில், கூலி வேலை பார்த்து தன்னுடைய 2 குழந்தைகளையும் கவனித்து வந்தார். இந்த சூழ்நிலைகள் தான் முத்துக்குமாருக்கும் மகேஸ்வரிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கிடையிலான பழக்கம் நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே […]