உள்நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், சீரான விநியோகத்தை உறுதி செய்யவும், டீசல் ஏற்றுமதிக்கான தடையை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரஷ்யா நீட்டித்துள்ளது. உக்ரைனின் தொடர் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எரிசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் பல சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி […]

