மொபைல் போன்களில் வரும் போலியான லிங்க் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது; மின் கட்டணம் செலுத்த சொல்லி அறிவிக்கப்படாத எண்கள் அல்லது இணையத் தொடுப்புகளில் இருந்து வந்தால் அவற்றை தவிர்க்கவும் எனவும் அதிகாரப்பூர்வ வலைத்தளம்/மொபைல் செயலி மூலம் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் அந்த பதிவில், […]

தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தவறான தகவல் பரவி வருகிறது. தனியார் பேருந்து உரிமையாளர்கள், பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதுகுறித்து மக்கள் கருத்து கேட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த […]

இந்தியாவுக்கான வள ஆதார தேவை திட்டமிடுதல் கட்டமைப்புக்கு, மத்திய மின்சார ஆணையத்துடன் ஆலோசித்து விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த விதிமுறைகள், மின்சார (திருத்த) விதிகள் 2022-ல் 16-வது விதியின் கீழ் வகுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை போதுமான அளவில் கிடைப்பதை இந்த விதிமுறைகள் உறுதிசெய்யும். மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மின் விநியோக நிறுவனங்கள் தேவையான வள ஆதாரத்தை குறைந்த […]

நேரத்துக்‌கேற்ப மின்‌ கட்டணம்‌ வீடுகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்‌ பயன்பாடு அதிகம்‌ உள்ள காலை மற்றும்‌ மாலை நேரங்களில்‌ மின்சாரம்‌ பயன்படுத்து வோருக்கு 20% கூடுதல்‌ கட்டணம்‌ வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேரத்துக்‌கேற்ப மின்‌ கட்டணம்‌ வசூலிக்கும்‌ நடைமுறை வீடுகளுக்கு பொருந்தாது. எனவே வீட்டு நுகர்‌வோர்கள்‌ இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள்‌ என தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகம்‌ அறிவித்துள்ளது.

தொழில்‌ அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்‌ ஒன்றிக்கு 13 பைசா முதல்‌ 21 பைசா வரை மின்கட்டணம்‌ உயரும்‌ என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு விகிதம்‌ மறுஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர்‌ மாதத்தில்‌ கட்டணம்‌ உயர்த்தப்பட்ட நிலையில்‌, 2022 ஏப்ரல்‌ மாதத்தின்‌ விலைக்‌ குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட்‌ மாதத்தின்‌ விலைக்‌ குறியீட்டு எண்‌ கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்பட்டது. இதனால்‌ […]

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.  மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்குமாறு, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்தது. இதனையடுத்து மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வீடுகள் மற்றும் […]

மின்சார தேவை அதிகரிக்கும் காலத்தில் அதன் கையிருப்பை உறுதி செய்வதற்கான பிரத்தியேக தளத்தை (PUShP- High Price Day Ahead Market and Surplus Power Portal) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கோடை காலங்களில் போதுமான மின்சார கையிருப்பை உறுதி செய்யும் உத்தியின் ஒரு பகுதியாக இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். பயன்பாட்டில் உள்ள மின்சாரம் அனைத்தும் நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுவதை இது உறுதி செய்யும். அதிக விலையை நிர்ணயிக்க எவருக்கும் […]

மின் கட்டணம் செலுத்தாத அரசு துறைகளின் மின் இணைப்பை துண்டிக்க தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். சென்னையில் கடந்த 15-ம் தேதி, மின் வாரியத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.. மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் மின்வாரிய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.. மேலும், அத்தியாவசிய சேவை வழங்கும் அரசு துறை தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை […]

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Electrican பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.9,500 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் வயது இருக்க […]

வீடு விசைத்தறி கைத்தறி குடிசை மற்றும் விவசாய நகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் சென்ற வருடம் அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த பணிகள் நவம்பர் மாதத்தில் ஆரம்பித்த நிலையில், டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மின் இணைப்பு என்னையும் ஆதார் கார்டு எண்ணையும் பலர் இணைக்காத நிலையில் கால அவகாசம் ஜனவரி […]