12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை […]
election
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நிரப்பும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in -ல் எஸ்ஐஆர் படிவத்தை ஆன்லைனில் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை […]
முகவரி மாறி வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002-04 காலகட்டத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டது. இந்த நிலையில், 2026 தொடக்கத்தில் தமிழகம், […]
பீகார் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இடைத் தேர்தல்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், 2025 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறவிருப்பதை அடுத்து பீகார் முழுவதும் 824 பறக்கும் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 2025 நவம்பர் 03 அன்று, பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் […]
வாக்காளர்கள் 1950 என்ற உதவி எண்ணை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான கேள்விகள் / குறைகளுக்கு தீர்வு காணலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களின் தேர்தல் தொடர்பான அனைத்துவிதமான கேள்விகள் / குறைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் 36 மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு தேசிய வாக்காளர் உதவி எண்ணை தேர்தல் ஆணையம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உதவி தொலைபேசி எண்களை தேசிய […]
பீகார் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் 2025 கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலுக்கான அட்டவணையையும், இடைத்தேர்தல்களையும் அறிவித்தது. பீகார் தேர்தல்களில் வாக்குப்பதிவு முறையே நவம்பர் 6, 2025 மற்றும் நவம்பர் 11, 2025 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 126 (1)(b), அந்த வாக்குச் சாவடியில் எந்தவொரு தேர்தலுக்கும் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு […]
பீகார் தேர்தல், 2025 தேர்தலுக்கு முந்தைய மற்றும் வாக்குப்பதிவு நாளில் அச்சு ஊடக விளம்பரங்களுக்கு எம்சிஎம்சி மூலம் முன்கூட்டிய சான்றிதழ் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2025 பீகார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அட்டவணையையும், 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு தேதி நவம்பர் 6, 2025 (வியாழக்கிழமை), நவம்பர் 11, 2025 (செவ்வாய்க்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நியாயமான பிரச்சார சூழலை உறுதி செய்வதற்காக, […]
அரசியல் கட்சிகள் சமூக ஊடகத்தில் விளம்பரம் செய்வதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவை பொதுத் தேர்தல், 6 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 8 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிக்கையை 2025 அக்டோபர் 6 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. சமூக ஊடகம் உட்பட மின்னணு ஊடகத்தில் வெளியிடுவதற்கான அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் முன்னதாக சான்றிதழ் பெறுவதற்கு ஊடக […]
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலகர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் துணை அதைகாரிகளுக்கு இம்மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆன்லைன் மதிப்பீடு, வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல் உள்ளிட்ட பயிற்சியை தேர்தல் ஆணையம் நடத்தியது.இந்த பயிற்சியில் 243 வாக்குச்சாவடி அதிகாரிகள் 1418 துணை […]
போட்டி கட்சிகள், வேட்பாளர்களுக்கு எதிரான காணொலி காட்சிகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிக்கை 2025 அக்டோபர் 6 அன்று வெளியிடப்பட்டதை அடுத்து, நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகள் வேட்பாளர்கள் மற்றும் அரசியல்கட்சிகளின் சமூக ஊடகம் உட்பட இணைய தளத்தில் […]

