முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உமங் செயலி மூலம் யு.ஏ.என். எண் ஒதுக்கீடு உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் சேவைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும், பயனர்கள் பயன்படுத்த எளிதானதாகவும் மாற்றுவதற்கு தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள், அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பான, திறமையான சேவைகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். அண்மைக் காலங்களில் […]
epfo
Do not approach third-party companies or agents for PF-related services.
EPFO அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. EPF-ல் இருந்து அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க ஜுலை 11-ம் தேதி கடைசி நாளாகும். EPF உறுப்பினர்கள் இந்த காலக்கெடுவை தவறவிட்டால், அவர்கள் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். தேவைப்படும் ஆவணங்கள்: உங்கள் […]
ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் தற்காலிக சம்பளப்பட்டியல் புள்ளி விவரம் 2023 ஜூன் 20 அன்று வெளியிடப்பட்டது. இதன்படி இந்த அமைப்பின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 2023 ஏப்ரல் மாதத்தில் 17.20 லட்சம் கூடியுள்ளது.இவர்களில் 8.4 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வந்துள்ளனர். புதிதாக சேர்ந்த உறுப்பினர்களில் 54.15 சதவீதம் பேர் 18-லிருந்து25 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலோர் அமைப்பு சார்ந்த தொழில்துறையில் இணைந்திருப்பதோடு […]
EPFO பென்ஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்பு EPFO உறுப்பினர்களாக இருந்து அதிக பென்ஷன் பெறுவதற்கு தற்போது வரை விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக பென்ஷன் பெற இருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பம் பெற்ற தேதியிலிருந்து அடுத்த 20 நாட்களுக்குள் உடனடியாக செலுத்த வேண்டும் என […]
உங்கள் EPFO இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை பார்க்கலாம். நீங்கள் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், உங்கள் மொபைல் எண் உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், UAN எண் இல்லாமல் கூட உங்கள் பிஎஃப் கணக்கு இருப்பு தொகை பற்றிய தகவலைப் பெறலாம். அதேபோல, 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்வதன் மூலம், தங்கள் கணக்கின் இருப்பை அறியலாம். இந்த எண்ணுக்கு நீங்கள் மிஸ்டு கால் செய்தவுடன், உங்கள் […]
வருங்கால வைப்பு நிதி அமைப்பு மார்ச் மாதத்தில் மட்டும் 13.40 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. 2023 மே 20-ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தற்காலிக ஊதியத் தரவின்படி, 2023 மார்ச் மாதத்தில் 13.40 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. மொத்த நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். முந்தைய நிதியாண்டான 2021-22 உடன் ஒப்பிடும்போது 13.22% உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதேபோல மார்ச் […]
நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது வழக்கம். இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12% தொகையை ஊழியரும், அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் PF கணக்கில் செலுத்துவது கட்டாயம். அதன்படி, உங்களுடைய பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பணம் சேர்ந்து கொண்டே […]
EPFO அமைப்பில் பதிவு செய்திருக்கும் தகுதி வாய்ந்த உறுப்பினர்கள் அதிக பென்சன் பெறுவதற்கான காலக்கெடு ஜூன் 26ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இபிஎப்ஓ அமைப்பின் இணையதளத்தில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கும் வசதி சமீபத்தில் உருவாக்கப்பட்டது.கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 2014ம் ஆண்டு தொழிலாளர் பென்சன் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவில் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அதிக ஓய்வூதியம் […]
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது இந்திய அரசின் மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். தனியார் மற்றும் அரசு வேலைகளில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் பிஎஃப் கணக்கு உள்ளது. மாதந்தோறும் ஒவ்வொரு ஊழியரின் சம்பளத்தில் இருந்தும் 12 சதவீத ரொக்கப்பணம் அவர்களின் PF கணக்கில் சேர்க்கப்படும். அதேபோல, நிறுவனமும் ஊழியரின் எதிர்கால பயனுக்காக அதே அளவு பணத்தை டெபாசிட் செய்யும். அதற்கு வட்டியும் கிடைக்கும். PF […]