நடப்பாண்டில் (2024-2025ஆம் ஆண்டிற்கு) “பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க பழந்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்கும்விக்கும் திட்டத்தின் கீழ் 50 ஏக்கர் பரப்பளவில் 1 ஏக்கருக்கு ரூ.3,000/- வீதம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படவுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் சொந்தமாக கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகள் அவர்களது சொந்த நிலத்தில் பாசன வசதியுடன் (குறைந்த பட்சம் 0.5 ஏக்கர் பராமரிக்கும், வளர்க்கப்படும் தோட்டப்பயிர்கள், […]
farmers
திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி; தொடக்க கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்களை கேட்டு அவர்களை சிரமப்படுத்துகின்றனர். திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது. இதுகுறித்து தஞ்சாவூருக்கு வந்திருந்த பிரதமரிடம் பேசினேன். இப்போது கடன் பெறுவதற்கு ஆவணங்கள் தேவையில்லை என்று கூறுகிறார்கள்.. […]
இயற்கை வேளாண் பொருட்களைத் தேடி வாங்கும் அளவுக்கு மக்களிடையே மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி மற்றும் ‘We The Leader Foundation’ என்ற அமைப்பின் சார்பில் இளையோர் வேளாண் மாநாடு நேற்று நடை பெற்றது. நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவரும், அமைப்பின் தலைமை ஊக்குவிப்பாளருமான அண்ணாமலை, இந்திய பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மையின் பங்கு மிகக் குறைவாக இருக்கிறது. அதை மாற்றக்கூடிய […]
தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 2024-25 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 861 விவசாயிகளிடமிருந்து 31473.988 மெ.டன்கள் கரும்பு விநியோகம் செய்யப்பட்டதற்கான தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை ரூ.1.09 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவுவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 2024-25 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் […]
பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தின் 20-வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து நாளை விடுவிக்கிறார். பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தின் அடுத்த தவணை நாளை விடுவிக்கப்படும். வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும், அதிகபட்ச விவசாயிகளை இந்த பலன் சென்றடைவதை உறுதி செய்யவும், மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் […]
Who will get the Rs.2000 that will be deposited in the farmers’ bank accounts? Let’s see right away..
டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் நடைபெறுகிறது. சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாவட்டத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நிலத்தடி நீரை கொண்டு இப்பகுதியில் அதிக விவசாயம் நடைபெறுவதால் சம்பா மற்றும் குறுவை சாகுபடி பெருமளவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நெல் மற்றும் இன்றி மாற்று பயிராக வாழை, கரும்பு, மஞ்சள், பருத்தி, மற்றும் காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டு இப்பகுதி […]
பிஓஎஸ் கருவிகள் மூலம் ஆதார் அடிப்படையில் பயனாளிகளுக்கு விற்கப்படும் உண்மையான விற்பனை அளவின்மீது பல்வேறு உரங்களின் தர நிலைகளுக்கு ஏற்ப 100% மானியம் உர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது. உரங்களுக்கு டிபிடி” திட்டத்தின்கீழ், ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையங்களிலும் பயன்படுத்தப்படும் பிஓஎஸ் கருவிகள் மூலம் ஆதார் அடிப்படையில் பயனாளிகளுக்கு விற்கப்படும் உண்மையான் விற்பனை அளவின்மீது பல்வேறு உரங்களின் தர நிலைகளுக்கு ஏற்ப 100% மானியம் உர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது. மறுப்பேதும் தெரிவிக்காமல் […]
சிறு மற்றும் அடித்தட்டு விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு, ‘பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு, 60 வயது நிறைவடைந்த பின், மாத ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்கப்படும். செப்டம்பர் 12, 2019 அன்று தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் மன்தன் யோஜனா (PM-KMY) நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் (SMF) சமூகப் பாதுகாப்பை வழங்கி வருகிறது. இந்த […]
விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து ஆண்டு கணக்கில் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சிக்கு வந்த போது தமிழகத்தில் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பித்து 4.50 லட்சம் விவசாயிகள் காத்திருந்ததனர். விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்போவதாக அறிவித்த திமுக அரசு […]