இந்தியாவில் ஃபாஸ்டேக் அமைப்பை எளிதாக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பிப்ரவரி 1, 2026 முதல் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் புதிய ஃபாஸ்டேக்குகளுக்கு ‘உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்’ (KYV) சரிபார்ப்பு செயல்முறை பொருந்தாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஃபாஸ்டேக்குகள் வழங்குவதிலும் பயன்படுத்துவதிலும் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கவும், ஆவணங்களை மீண்டும் மீண்டும் கேட்கும் தொந்தரவைக் குறைக்கவும், நுகர்வோர் புகார்களைக் குறைக்கவும் […]

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த வாகனங்களில் பல, வழியில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளைக் கடக்கின்றன. தற்போது நாட்டில் 1,065க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன, மேலும் ஓட்டுநர்கள் அவற்றைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், பல ஓட்டுநர்கள் அறிந்திராத ஒரு முக்கியமான வசதி உள்ளது. உங்கள் வீடு ஒரு சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ.க்குள் இருந்தால், அந்தக் […]

நாடு முழுவதும் புதிய சுங்கக்கட்டணம் முறை நாடு முழுவதும் அமலாகிறது என்ற சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.. மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய அவர் “ புதிய சுங்கக்கட்டண முறை தற்போது 10 இடங்களில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது.. இது ஒரு ஆண்டுக்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இந்த புதிய முறையால், வாகனங்களை நிறுத்தி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பழைய முறை முடிவுக்கு வரும். […]

தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் நிலையில் ஃபாஸ்ட்டேக் இல்லாமல் […]

இந்தியாவில் FASTag பயன்படுத்துவோர் அனைவரும் புதிய Know Your Vehicle (KYV) விதிமுறையை நிறைவேற்ற வேண்டும்; இல்லையெனில் அவர்களின் டாக்கள் (FASTags) டோல் பிளாசாக்களில் தடைசெய்யப்படும் அபாயம் உள்ளது. அரசு இந்த விதியை கட்டாயமாக்கியுள்ளது, காரணம் FASTag மோசடிகளை தடுக்கவும், புதிய தானியங்கி டோலிங் அமைப்பை (Automated Tolling System) செயல்படுத்தவும். KYV எப்போது தொடங்கியது? KYV விதிமுறை 2024 அக்டோபர் 31 முதல் அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் வங்கிகள் […]

தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்களுக்கு சுங்கச்சாவடிகளில் மாதாந்தர, வருடாந்தர பாஸ் பற்றிய தகவலை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் மாதாந்தர, வருடாந்தர பாஸ் கிடைப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வெளிப்படை தன்மையை உருவாக்க இது பற்றிய விவரங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் காட்சிப்படுத்துமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதன் கள அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த பாஸ்களுக்கான கட்டணம் மற்றும் நடைமுறைகளில் சாலை பயன்பாட்டாளர்கள் […]

தீபாவளியை முன்னிட்டு ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் பரிசு அறிவிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளில் பயணத்தை எளிதாக்கும், சௌகரியத்தை வழங்கும் ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ், இந்தப் பண்டிகை காலத்தில் பயணிகளுக்கு ஒரு சிறப்பான பரிசாக இருக்கும். இது நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச் சாலைகளில் ஆண்டு முழுவதும் தடை மற்றும் தொந்தரவு இல்லாத பயணத்தை அனுமதிக்கிறது. ராஜ்மார்க்யாத்ரா செயலி மூலம் வருடாந்திர பாஸை பரிசாகப் பெறலாம். செயலியில் உள்ள […]

ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச்சீட்டு பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச் சீட்டு முறைக்கு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தமுறை அறிமுகப்படுத்தப்பட்ட 2 மாதங்களில் 5.67 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. மொத்தம் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் இதை பயன்படுத்தியுள்ளனர். 2025 ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச் சீட்டு முறை மூலம் குறைவான கட்டணத்துடன் தேசிய நெடுஞ்சாலைகளை […]

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுத்தமில்லாத கழிப்பறை பற்றி தகவல் அளித்தால், ரூ.1,000 அன்பளிப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிக்கையில்: தேசிய நெடுஞ்சாலை துறை தூய்மை பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர், சுங்கச் சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமில்லாமல் இருந்தால் அதுபற்றி தகவல் அளிக்கலாம். இதற்கு […]