“ஒரு பஸ் வருமா?” என்று வெயிலிலும் மழையிலும் சாலையோரம் காத்திருந்த நிலை இனி மாறப்போகிறது. வடசென்னை தண்டையார்பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வாக, ரூ.2.4 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்குத் தயாராகியுள்ளது. எண்ணூர் ஹை ரோட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையம், இதுவரை தற்காலிகமாக பேருந்துகள் இயக்கப்பட்ட இடத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக […]