2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் சியோமி நிறுவனத்தில் சுமார் 1500 பேர் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய நிலையில், தற்போது ஊழியர்கள் எண்ணிக்கை 1000த்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 30 பேரை பணிநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. மேலும் இனி வரும் காலத்திலும் அதிகப்படியானோர்-க்கு பிங்க் ஸ்லிப் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொடிக்கட்டி பறந்து வந்த சியோமி கடந்த 2 வருடத்தில் […]

பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ராணுவ விவகாரங்கள் துறை உள்நாட்டு ராணுவ படைப்பிரிவில் ஏற்கனவே உள்ள விதிகளில் பெண் அதிகாரிகளின் பணிகள் குறித்த திருத்தங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. உள்நாட்டு ராணுவத்தில் 2019-ம் ஆண்டு முதல் பெண் அதிகாரிகள் சுற்றுச்சூழல் பணிக்குழு பிரிவுகள், எண்ணெய்த்துறை பிரிவுகள் மற்றும் ரயில்வே பொறியியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், உள்நாட்டு ராணுவத்தில் […]

சூடானில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்து காணொலிக்காட்சி வாயிலாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். சூடானில் மிக சமீபத்தில் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் அங்குள்ள உண்மையான களநிலவரம் குறித்து நேரடி தகவல்களை பிரதமர் கேட்டறிந்தார். குறிப்பாக அந்த நாட்டில் வாழ்ந்து வரும் 3,000-க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சூடானில் வாழும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்த […]

இந்தியா- சிங்கப்பூர் இடையே யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறை மோடி இன்று துவக்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோர் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையேயான எல்லைதாண்டிய இணைப்புச் சேவைகளான இந்தியாவின் UPI முறை மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகியவற்றை இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த சேவையை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் […]

இந்திய ராணுவத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது இதன்படி வெவ்வேறு துறைகளில் காலியாக உள்ள 135 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 03.03.2023 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த அறிவிப்பின்படி இந்திய ராணுவத்தில் கிளீனர், மெசஞ்சர், மெஸ் வெயிட்டர், பார்பர், வாசர் மென் மற்றும் குக் ஆகிய […]

ஸ்பிரிங்க்ளர் நிறுவனம் 4% ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனமான ஸ்பிரிங்க்ளர் அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 4 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனம் கடந்த வாரம் பணிநீக்க வேலைகளை தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் அதன் […]

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோடி  விழுப்புரம் மாவட்டத்தில்  இந்த முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு  அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தந்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்  யுனெஸ்கோ உதவியுடன் அமைக்கப்பட்ட  சர்வதேச நகர் ஆகும். இங்கு பல்வேறு வெளிநாட்டினரும் வந்து தங்கி இருந்து இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரத்தினை அறிந்து கொள்வதோடு அங்கிருக்கும் சிறுவர்களுக்கு  கல்வி மருத்துவம் உள்ளிட்ட உதவிகளையும் அளித்து  வருகின்றனர். பல்வேறு வெளிநாட்டின் அறிந்து வந்து […]

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி உலகம் முழுதும் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் அடங்கியபாடில்லை. போட்டியை நேரில் பார்த்து ரசித்த இந்திய பிரபலங்கள் பலர் தங்கள் செல்ஃபி புகைப்படங்களை தங்கள் டிவிட்டர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது டிரண்டாகி வருகிறது. கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை நேரில் சென்று பார்வையிட்ட மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் பாலிவுட் நடிகர்கள் கார்த்திக் ஆர்யன், ரன்வீர் சிங் […]

2025-ம் ஆண்டு வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும் விரைவு சக்தி சரக்கு முனைய கொள்கையின் கீழ் மூன்றாண்டுகளில், அதாவது 2024-25 வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 22 முனையங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கையின் கீழ் சரக்கு முனையங்களை அமைக்க 125 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 79 விண்ணப்பங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வேக்கு சொந்தம் இல்லாத […]