இந்தோனேசியாவின் பண்டா ஆச்சேவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபட்டதற்காக ஒரு இளம் தம்பதியினருக்கு பொது இடத்தில் 100 கசையடிகள் தண்டனை விதிக்கப்பட்டது, இது பிராந்தியத்தின் கடுமையான ஷரியா சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தண்டனையாகும். மேலும் இஸ்லாமிய சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும் ஒரே இந்தோனேசிய மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த உலகளாவிய கவலைகளை மீண்டும் தூண்டிவிட்டது. மாகாண தலைநகரில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த சவுக்கடி நடந்தது, அங்கு […]

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான மேற்கு சுமத்ராவில் இன்று அதிகாலை 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி வர வாய்ப்பு உள்ளதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்று வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஜகார்த்தா நேரப்படி செவ்வாய்கிழமை அதிகாலை 03:00 மணிக்கு ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் மென்டவாய் தீவுகள் மாவட்டத்தில் வடமேற்கே 177 கிமீ தொலைவில் மற்றும் கடலுக்கு அடியில் 84 கிமீ ஆழத்தில் […]

இந்தோனேசியாவின் மவுண்ட் மெராபி வெடித்ததில் எரிமலை குழம்பு மற்றும் சாம்பல் வெளியேறியதால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.. இந்தோனேசியாவில் சுமார் 130 எரிமலைகள் ஆக்டிவாக உள்ளன.. இதனால் அங்கு அடிக்கடி எரிமலை வெடிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.. இந்த நிலையில் அந்நாட்டின் கலாச்சார தலைநகரான யோககர்த்தாவிற்கு அருகில் உள்ள ஜாவா தீவில் அமைந்துள்ள மெராபி எரிமலை நேற்று வெடித்தது.. இதானால் சுமார் 7 கிலோமீட்டர் (4.3 மைல்கள்) வரை சூடான சாம்பல் […]

தற்போது உலகெங்கிலும் எரிமலை வெடிக்கும் சம்பவங்களும் பூகம்பங்களும் அவ்வப்போது நடைபெற்று மக்களை அதிர்ச்சியும் அச்சமும் கொள்ள செய்து கொண்டிருக்கின்றன. தற்போது இது போன்றதொரு சம்பவம் இந்தோனேஷிய நாட்டில் நடைபெற்று இருக்கிறது. இந்தோனேஷிய நாடு இயற்கை வளங்களுக்கும் எரிமலைகளுக்கும் பேர் போன ஒரு நாடு. இந்த நாட்டின் தீவுக் கூட்டங்களில் ஏராளமான எரிமலைகள் இருக்கின்றன. அவற்றில் இருக்கக்கூடிய ஒரு எரிமலை தான் சற்று முன் வெடித்து சிதறி இருக்கிறது. இந்தோனேஷிய நாட்டின் […]

இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவில் 5.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவை சுற்றி பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய ஜாவா என்ற பகுதியில் 7 கிலோ மீட்டர் சுற்றளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பல குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள் முற்றிலும் இடிந்து […]

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடந்த “இந்தோனேசியாவின் டாப் லீக் BRI லிகா கால்பந்து போட்டியில் கலவரம் வெடித்ததில் குறைந்தது 127 பேர் உயிரிழந்தனர். வன்முறை நெரிசலாக மாறியது, ஆயிரம் கணக்கான மக்கள் காயமடைந்தனர். இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழந்தைகளும் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது. முதல் போட்டிக்குப் பிறகு […]