ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் மக்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆங்காங்கே நெருக்கடிகள் தலைதூக்கியுள்ளன; பல நாடுகளில் எண்ணெய் வர்த்தகம் முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது. எனவே, இந்தப் போர் சில நாடுகளுக்குப் பேரழிவாக அமைந்திருந்தாலும், வேறு சில நாடுகள் பொருளாதார ரீதியாகப் புதிய எழுச்சி கண்டு வருகின்றன. அந்த நாடுகள் எவை என்பதை இப்போது பார்க்கலாம்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடக்கத்தில் வகுத்திருந்த போர் உத்தி வெற்றிகரமாகவே அமைந்தது […]
Iran Israel Conflict
மத்திய கிழக்கில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது. ஈரான் போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியைத் தணிக்கும் பொருட்டு அமெரிக்கா தற்காலிகமாகத் தடைகளை நீக்கியதைத் தொடர்ந்து, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தற்போது ஈரானிய கச்சா எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஈரானிய எண்ணெயை வாங்க விரும்பும் இந்திய நிறுவனங்கள், பணம் செலுத்தும் விதிமுறைகள் போன்ற விவரங்கள் குறித்து அமெரிக்க […]
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளரான ஜெனரல் அலி முகமது நயீனி, இஸ்ரேலிய-அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அந்தப் படை உறுதிப்படுத்தியது. அரசுக்குச் சொந்தமான தஸ்னிம் செய்தி நிறுவனம், டெலிகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில், நயீனி வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அவரது கருத்துக்களை உள்ளூர் ஊடகங்கள் மேற்கோள் காட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு அலி முகமது நயீனியின் மரணம் நிகழ்ந்துள்ளது. […]
மேற்கு ஆசியாவில் தொடரும் போருக்கு மத்தியில், ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும் என்றும் அவர் கூறினார். சமூக ஊடகங்களில் பதிவிட்ட அவர், ஈரானுக்கு ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகள் காரணமாக தீவிர இராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை என்றும், ஆனால் […]
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் 11-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சி படைகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், போரின் முடிவை […]
சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தை ஏவுகணை போன்ற இராணுவ குண்டு தாக்கிய சம்பவத்தில் எந்த இந்தியரும் உயிரிழக்கவில்லை என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) நடந்த அந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒரு இந்தியர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தூதரகம் கூறியுள்ளது. “நேற்று மாலை அல்-கர்ஜ் பகுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் எந்த இந்தியரும் […]
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இஸ்ரேல் ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப், இந்த முடிவு தனியாக அவர் எடுக்கும் ஒன்று அல்ல என்றும், பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து “பரஸ்பரமாக” எடுக்கப்படும் முடிவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தானும், நெதன்யாகுவும் இல்லையெனில் ஈரான் இஸ்ரேலை முழுமையாக அழித்திருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் பேசிய டிரம்ப், ஈரான் இஸ்ரேலையும் […]
உலகம் எப்போதும் ஆபத்தில் உள்ளது. பல நாடுகள் வைத்திருக்கும் அணு ஆயுதங்கள்.. அவை எப்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியாது. இப்போது, ஈரான் போரை பொறுத்தவரை.. ஈரான் இஸ்ரேலில் உள்ள டிமோனா அணுசக்தி நிலையத்தை குறிவைத்துள்ளது. ஈரானிய இராணுவ அதிகாரி ஒருவர் அளித்த எச்சரிக்கையின்படி, அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முயன்றால், டிமோனாவை குறிவைப்பதாக அவர்கள் மிரட்டியுள்ளனர் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் மார்ச் […]
கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள குடும்பங்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அதில் பல மாடிகள் கொண்ட ஒரு கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் […]
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எப்படி எதிரி நாடுகளின் இலக்காக மாறினார்? அதிநவீன பாதுகாப்பு இருந்தபோதிலும் இஸ்ரேலிய ஏவுகணைகள் அவரை எவ்வாறு கண்காணித்தன? இந்தக் கேள்விகளுக்கு இப்போது பரபரப்பான பதில்கள் கிடைத்து வருகின்றன. கமேனியின் குடியிருப்பு வளாகம் முதல் அவர் பயன்படுத்தும் தகவல் தொடர்பு அமைப்புகள் வரை அனைத்தும் பல ஆண்டுகளாக இஸ்ரேலிய கண்காணிப்பின் நிழலில் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.. இஸ்ரேலிய உளவுத்துறை நீண்ட காலத்திற்கு […]

