ரஷ்யா ஈரானுக்கு மிகவும் முக்கியமான உளவுத் தகவல்களை வழங்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன… மத்திய கிழக்கில் செயல்பட்டு வரும் அமெரிக்க ராணுவ சொத்துகள், குறிப்பாக போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் முக்கியமான ராணுவ வளங்களை கண்டறிந்து தாக்குவதற்கு ஈரானுக்கு உதவக்கூடும் என கூறப்படுகிறது. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை நன்கு அறிந்த அந்த இரண்டு அதிகாரிகளும் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையில் AP செய்தி நிறுவனத்திடம் பேசினர். அவர்கள் கூறுகையில், […]
iran war
துபாய் நகரில் வசிக்கும் மக்களுக்கு இன்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. “ஏவுகணை தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்று எச்சரிக்கும் அவசர அறிவிப்பு நகரம் முழுவதும் பலரின் மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த எச்சரிக்கை, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் அறிவிக்கப்பட்டது.. கடந்த சனிக்கிழமை இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் அமெரிக்கா இராணுவ தளங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் உள்ள வளைகுடா […]
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் டையிலான போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இரு தரப்பினரும் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் இந்தப் போர் தற்போது 6-வது நாளாக நீடித்து வருகிறது. தற்போதைக்கு இந்த மோதல் குறையும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. பலி எண்ணிக்கை அதிகரிப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 5 நாட்களில் ஈரானில் மட்டும் 1,000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லெபனான் நாட்டில் சுமார் […]
மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் புது டெல்லியில் ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை, மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியம் ஆகிய பகுதிகளில் உருவாகி வரும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது […]
அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடைந்துள்ளது. சமீப ஆண்டுகளில் இதுவே மிகக் கடுமையான மோதலாக கருதப்படுகிறது. அமெரிக்கா–இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையே நேரடி மோதல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரானின் அரசாங்க மற்றும் ராணுவ இலக்குகளை தாக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், […]
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கொஜஸ்தே பகெர்சாதே திங்கட்கிழமை உயிரிழந்ததாக, ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் காயமடைந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்துள்ளார். 79 வயதான மன்சூரே கொஜஸ்தே பகெர்சாதே, ஈரானின் மஷ்ஹத் நகரில் பிறந்தவர். அவர், ஈரான் அரசின் ஒளிபரப்பு நிறுவனமானஇஸ்லாமிக் குடியரசு ஈரான் ஒலிபரப்பு நிறுவனத்தில் முன்னாள் துணை இயக்குநராக இருந்த […]
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ளது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் 76 வயதான பிரதமர் நெதன்யாகு அங்கு இருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ஆவது தாக்குதல் அலையில், ‘கெய்பார் ஷெகான்’ (Kheybar Shekan) என்ற கண்டம் விட்டு […]

