உலகின் டாப் 10 சக்தி வாய்ந்த விமானப்படைகள் குறித்து பார்க்கலாம்.. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் போன்ற சமீபத்திய மோதல்கள் காரணமாக உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.. தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பல நாடுகளும் தங்கள் ராணுவம் மற்றும் வான்வழி பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றன.. குறிப்பாக பல நாடுகள் சக்திவாய்ந்த விமானப்படையை வைத்திருக்கின்றன.. 2024 வரை தொகுக்கப்பட்டு 2025 இல் உலக […]

ஏமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுத்தி பிரதமர் கொல்லப்பட்டார். ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி, கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சனாவில் உள்ள தனது குடியிருப்பில் இருந்த போது இந்த வான்வழி தாக்குதல் நடந்ததாகவும், அதில் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டார் என்றும் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.. இஸ்ரேல் இராணுவம் கடந்த வியாழக்கிழமை இந்த தாக்குதலை நடத்தியது. […]

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதனை தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் இதுவரை ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் முயற்சித்து வந்தன. இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. இந்த […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த அதிர்ச்சி தகவலை ஈரான் நீதித்துறை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து நேற்றைய தினம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த […]

ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல்களில், 610 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 4,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர், “கடந்த 13ம் தேதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 49 பெண்களும், […]

ஈரானில் குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பகிரப்பட்ட ஒரு பதிவில், டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை பெரிய மீறல் என்று விவரித்தார். இஸ்ரேல் அதன் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரின் பதிவில் “இஸ்ரேல். அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் செய்தால் அது ஒரு பெரிய […]

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ஈரான் ஏவுகணையை ஏவியதை அடுத்து இஸ்ரேலின் பீர் ஷேவாவில் 3 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இரு நாடுகளும் போர்களை முழுமையாக நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறினார். முழுமையான போர் நிறுத்தம் சில மணி நேரங்களுக்குள் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார். “அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் […]