மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஐயங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவப்பிரியா என்ற இளம் பெண்ணுக்கும், நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராஜபாண்டி என்ற இளைஞருக்கும் நேற்று மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டையில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் இரு வீட்டாரின் சம்மதத்துடனும் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இதில் மணமகள் சிவப்பிரியா பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருவதுடன் தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்ததாக தெரிகிறது இந்த நிலையில், […]

தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2014 ஆம் வருடம் அதிரடி தடை விதித்தது இதனை எதிர்க்கும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், அது தொடர்பான அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். இந்த சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் தொடை இருந்த வழக்கில் காளைகள் துன்புறுத்தல் என்பது வெறும் கட்டுக்கதை தான் என்று தமிழக […]

மதுரை அண்ணா நகரில் உள்ள சதாசிவ நகரை சார்ந்தவர் பிரேம்குமார்(35). ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் கடந்த 26 ஆம் தேதி பாண்டி கோவில் அருகே நண்பர் பாண்டி என்பவருடன் உரையாடிக் கொண்டிருந்தார் அப்போது அங்கு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் அவரை கடத்தி சென்றது. பின்னர் சிவகங்கை புதுப்பட்டி அருகே காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றது. அவரை பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் இல்லை என்று […]

பாலமேடு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் மாட்டுப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் பங்கேற்றார். பாலமேட்டைச் சேர்ந்த இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் ராஜேந்திரன், தெய்வானை தம்பதியின் மகனான அரவிந்தராஜ் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான காளைகளை அடக்கி சிறந்த வீரராக வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட போட்டியில் வாடிவாசலில் காத்திருந்த […]