கரூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி பென்சில் தமிழரசன், போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி பென்சில் தமிழரசன் மீது ஏற்கெனவே திருட்டு, தாக்குதல், மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்ட நடவடிக்கை எடுத்தனர். அரிக்காரம்பாளையம் சாலை மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த தமிழரசனை போலீசார் பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிவிட்டு […]
Karur
சட்டவிரோதமாக மணல் கடத்திய லாரியை சினிமா பாணியில் சுமார் 18 கி.மீ தூரம் காரில் துரத்திச் சென்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிடித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. சமீபத்தி கூட திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் அமைத்த ஸ்பெஷல் டீம், மணல் கடத்தலில் ஈடுபட்ட 26 லாரிகளை மடக்கி பிடித்தது. இந்நிலையில் இன்று […]
விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு கரூரில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துப் பேசியுள்ளார். நேற்று கரூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜய்காந்த் அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். இன்று காலை கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. இந்த […]
கரூர் மாவட்டம் கடவூர் சிந்தாமணிப்பட்டி பகுதியில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் இருக்கிறது. இதில் ஜூன் மாதம் 6 ஆம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் போது கரகம் சாதித்தல் மற்றும் ஆடல் பாடல் நிகழ்வுக்கு அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான […]
வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்தவகையில் கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை ஒட்டி பாலசுப்பிரமணியசுவாமிக்கு நேற்று காலை பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 108 லிட்டர் பாலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சிறப்பு […]
தமிழகத்தின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு தொடர்புள்ள பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதோடு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களும் வருமானவரித்துறையினரின் சோதனைக்கு தப்பவில்லை. சுமார் 100 பகுதிகளுக்கு மேல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது. கரூர் ராமகிருஷ்ணாபுறத்தில் […]
கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள ஓடையூர் பகுதியில் இருக்கின்ற சரவணன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் கடந்த 15 ஆண்டுகளாக தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கணவன், மனைவியான தங்கவேல்(65), தைலி (61) உள்ளிட்ட இருவரும் விவசாயம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை தோட்டத்து வீட்டில் தம்பதிகள் இருவரும் சடலமாக மீட்க பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ,ஏற்ப்பட்டுள்ளதால் அவர்களை கல்லை […]
கரூர் வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி சப்ரின் இந்த தம்பதிகளுக்கு சுயநிதி( 8), பர்வேஷ்(5) என்று 2 குழந்தைகள் இருக்கின்றன. 4 பேரும் பல்லடத்தில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு நேற்று கரூரில் இருந்து அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் சப்ரீனிடம் குளிர்பானத்தை கொடுத்து அதை குழந்தைகளுக்கு கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, குளிர்பானத்தை வாங்கி குழந்தைகள் இருவருக்கும் […]
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சின்ன கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி(50). இவருடைய மகள் ரம்யா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்ற நபருக்கும் இரு வீட்டு உறவினர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுமணப்பெண் ரம்யா தன்னுடைய கணவருடன் தாய் வீட்டிற்கு விருந்து சாப்பிடும் நிகழ்விற்கு சென்றுள்ளார். உறவினர்கள் வெளியே இருந்த சமயத்தில் வீட்டில் இருந்த […]
கரூரை சேர்ந்த சாமானிய மக்கள் நல கட்சியின் தலைவர் குணசேகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனதில் கரூர் காவிரி ஆற்றில் தொடர்ந்து சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதால் அந்த பகுதியில் ஆற்றுப்பொடுகையில் 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு அந்தப் பகுதியில் சீமை கருவேல புதர்கள் நிரம்பி காப்பி மணல் திட்டுகளாக மாறி இருக்கின்றன. நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக ராட்சத […]