இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.. 82 பேரைக் காணவில்லை என்று இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அப்பகுதியில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு பண்டுங் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, இன்று எங்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை உகந்த […]

மத்திய வியட்நாமில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன, இதனால் 41 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளின் கூரைகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களாக, இப்பகுதியின் பல பகுதிகளில் மழைப்பொழிவு 150 செ.மீட்டரைத் தாண்டியுள்ளது. காபி வளரும் முக்கிய மண்டலங்கள் மற்றும் பிரபலமான கடற்கரை இடங்களுக்கு பெயர் பெற்ற இந்தப் பகுதி, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. […]

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய பேருந்தில் 18 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பாறைகள் விழுந்தது. இதனால் மண்ணுக்குள் பேருந்து புதைந்தது. இதில் பயணித்த 18 […]

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஜம்முவின் பல மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதகமான வானிலை ஏற்படும் என்று எச்சரித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறை யூனியன் பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி, […]

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலா பகுதியில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையால் அட்டமலா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வயநாட்டில் பெய்த கனமழைக்குப் பிறகு, முண்டகை பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அப்பகுதியில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கனமழை காரணமாக, புன்னா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கிராம சாலை வெள்ளத்தில் மூழ்கியது. சேற்று நீர் ஆற்றில் பாய்ந்தது. எங்காவது நிலச்சரிவு ஏற்பட்டதா […]

வடக்கு சிக்கிமில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 1,200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் தொடர் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதால் பாலங்கள் சேதமடைந்து மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடுமையான மழைப்பொழிவு காரணமாக வடக்கு சிக்கிமில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமாக்கியுள்ளது, இதனால் 1,200 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மங்கன் மாவட்டத்தில் அமைந்துள்ள லாச்சென் மற்றும் லாச்சுங்கின் தொலைதூரப் பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர். கனமழையால் […]