பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா, தான் இறப்பதற்கு முன்பு 5079 ஆம் ஆண்டு வரை கணிப்புகளைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது, ​​2026 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகளைப் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. அவரது திகிலூட்டும் மற்றும் சுவாரஸ்யமான தீர்க்கதரிசனங்கள் உலகளாவிய ஈர்ப்பாக மாறியுள்ளன. 1996 இல் அவர் இறப்பதற்கு முன்பு, 5079 ஆம் ஆண்டுக்கான எதிர்காலத்தை அவர் கணித்திருந்தார், இருப்பினும் எந்த எழுத்துப்பூர்வ ஆவணங்களும் இல்லை. இயற்கை […]

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முழுவதும் இரவு முழுவதும் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.. மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர்.. பிராக்தா கிராமத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் […]

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் மழைப்பொழிவு இயல்பை விட 109% அதிகமாக இருக்கும் என்றும் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே வெள்ளம், மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் என பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது பருவமழைக் காலத்தை குறிக்கிறது. இந்தநிலையில், செப்டம்பர் மாதத்தில் சராசரி அளவைவிட(167.9 மிமீ) 109 சதவீதத்திற்கும் […]

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதை தொடர்ந்து பெரும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.. சமீபத்தில் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.. மேலும் மேக வெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையில் 5 பேர் இறந்தனர்.. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் உள்ள மஹோர் பகுதியில் உள்ள பத்தார் கிராமத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் ஒரே […]

ஜம்முவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. வைஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்ற யாத்ரீகர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய நதிகளான தாவி மற்றும் ராவியில் வெள்ளம், அபாய அளவுக்கு மேல் செல்கிறது. கதுவாவில் ராவி நதியை ஒட்டிய […]

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் சாலை அடைப்புகள் மற்றும் மின்சாரம் துண்டிப்புகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா, மண்டி, சிர்மௌர் மற்றும் சிம்லா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது, இந்த இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் […]