பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது கணவரான ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி மாடியில் இருந்து தவறி விழுந்ததாக குடும்பத்தினரிடம் கூறிய நிலையில், அவரது உடலில் காணப்பட்ட பலத்த காயங்கள் அந்தக் கூற்றில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஹோஷியார்பூர் மாவட்டம் முகேரியன் அருகே உள்ள சுனேஹ்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமா. இவருக்கும் அமர்ஜித் சிங் என்பவருக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். […]

