தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் உரிமைப் போராட்ட கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்குத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 3-ஆம் தேதி திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. […]