மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் சோலார் நிறுவன ஊழியர் ஒருவர் சமையலறை கத்தியால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காளப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் பாண்டித்துரை (35), தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவு […]
Madurai Crime
மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள் (50) என்பவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தனது மகன் ராஜாவை (30) இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த அய்யம்மாளின் மகன் ராஜாவுக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ள நிலையில், அவரது தொடர் குடிப்பழக்கம் காரணமாக மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். […]

