2026 சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி படுதோல்வி அடைவார் என நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை அரங்கேற்றி நெட்டிசன்களுக்கு ட்ரோல் மெட்டிரியல் ஆகிக் கொண்டிருக்கிறார். ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பைத் தயவு செய்து மாற்றிவிடுங்கள் […]

உடல்நலக்குறைவால் காலமான மு.க முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன், மு.க முத்து இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார்.. இன்று காலை 8 மணியளவில் அவரின் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக […]

தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு, ஏற்கனவே விடுபட்ட பெண் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு இம்முறை கட்டாயம் ரூ.1000 கிடைக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் ஜூலை 15 தொடங்கி வருகின்ற நவம்பர் 14-ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது. இதுவரை இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்காத தகுதியான பெண்கள் இருப்பின் உடனடியாக […]

தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து, முதலில் பணிகளை முடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில், தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். […]

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திருச்சி சிவாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டாலினையும் விமர்சித்துள்ளார். காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.. ஏசி இல்லாமல் காமராஜர் தூங்கமாட்டார் என்று அவர் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருச்சி சிவாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது […]

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற […]

விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து ஆண்டு கணக்கில் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சிக்கு வந்த போது தமிழகத்தில் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பித்து 4.50 லட்சம் விவசாயிகள் காத்திருந்ததனர். விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்போவதாக அறிவித்த திமுக அரசு […]

கோயில்களுக்கு வரக்கூடிய நிதி ஆதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசை பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு நிதியில் கல்லூரிகள் கட்டாமல், கோயில் நிதியில் ஏன் கட்டுகிறீர்கள்? என்று நியாயமான ஒரு கேள்வியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேட்டிருந்தார். பழனிசாமி, கோயில் நிதியை கல்விக்காக செலவழிக்கக் கூடாது என்கிறார். கல்விக்கு எதிராக […]