தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில்; விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில்; மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல. தமிழக பொது மக்களின் விருப்பமும் கூட. அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துகளையும் வகுத்துள்ளது. இதுகுறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தேன். இதுதொடர்பாக, […]

கட்டுமான பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்த வழிவகை செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள சுமார்‌ 2000 கல்குவாரிகள்‌ மற்றும்‌ சுமார்‌3500 கிரஷர்‌ யூனிட்டுகளில்‌ ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்‌பணிபுரிந்து வருகின்றனர்‌. தமிழகத்தின்‌ அத்தனை மாவட்டங்களிலும்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ கட்டுமானப்‌ பணிகள்‌, மெட்ரோ ரயில்‌ பணிகள்‌ மற்றும்‌ அரசுத்‌ திட்டங்களுக்கு, எம்‌.சாண்ட்‌ மற்றும்‌ ஜல்லி கற்கள்‌ வினியோகம்‌, […]

நான் முதல்வன் – 2023-24ஆம் ஆண்டிற்கான கல்லூரி கனவுப் புத்தகம் வழங்குதல் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி முதலமைச்சர் அவர்களால் 25.06.2022 அன்று ‘ கல்லூரிக் கனவு ‘ என்னும் பெயரில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் , 2023-2024 கல்வி ஆண்டிற்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. அதன் படி, கீழ் கண்டவாறு […]

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து செயல்படுத்தும் புன்னகை என்னும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம் ” பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் 09.03.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது . இத்திட்டமானது முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக […]

44வது செஸ்‌ ஒலிம்பியாட்‌ போட்டியின்‌ நிறைவு விழாவின்‌ போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ கபடி, சிலம்பம்‌ உட்பட 15 விளையாட்டுகளில்‌ பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசுஊழியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும்‌ என அறிவித்தார்கள்‌. அந்த வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ பிப்ரவரி 2023ம்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ தொடங்கி மார்ச்‌ 2023ம்‌ மாதம்‌ முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான […]

பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் ‌. இது குறித்து தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதனின் பொம்மையை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பால சாகித்ய புரஸ்கார் பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கருக்கும், இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் […]

முன்னாள்‌ முதலமைச்சர்‌ கலைஞர்‌ மு.கருணாநிதி அவர்களின்‌ நூற்றாண்டு விழாவையெட்டி சேலம்‌ மாவட்டத்தில்‌ 24.06.2023 அன்று பொதுமக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் முன்னாள்‌ முதலமைச்சர்‌ கலைஞர்‌ கருணாநிதி அவர்களின்‌ நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும்‌ வகையில்‌ மாவட்டந்தோறும்‌ துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்கள்‌ நடத்திட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. அதன்‌ ஒரு பகுதியாக மருத்துவம்‌ […]

பீகார் தலைநகர் பாட்னாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தனி விமானத்தில் செல்ல உள்ளார். வரும்‌ 2024 ஆம்‌ ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்‌ நடைபெற உள்ள நிலையில்‌ மீண்டும்‌ ஆட்சியை கைப்பற்ற பாஜக அனைத்து திட்டங்களையும் தீட்டி வருகிறது. பாஜகவை எதிர்க்க வலுவான எதிர் அணியை உருவாக்கும்‌ நோக்கில்‌ எதிர்க்கட்சிகள்‌ ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக பேசி வருகின்றனர்‌. இதுதொடர்பாக பிகார்‌ முதல்வர்‌ நிதிஷ்குமார்‌ பல்வேறு மாநில […]

கைதுக்கு அஞ்சுபவர்கள் அல்ல பாஜகவினர். தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கருத்து. கோவையை சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். பாஜக ஆதரவாளரான இவர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் உமா கார்க்கி26 என்ற பெயரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றார். இரு மதங்களுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாகவும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பெரியார், முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் குறித்தும் அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக திமுகவை சேர்ந்த கோவை வடக்கு […]