கைதுக்கு அஞ்சுபவர்கள் அல்ல பாஜகவினர். தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கருத்து. கோவையை சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். பாஜக ஆதரவாளரான இவர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் உமா கார்க்கி26 என்ற பெயரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றார். இரு மதங்களுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாகவும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பெரியார், முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் குறித்தும் அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக திமுகவை சேர்ந்த கோவை வடக்கு […]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம் இன்று திறக்கப்பட உள்ளது. திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் இன்று திறக்கப்பட உள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளார். அதேபோல முத்துவேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்க இருக்கிறார். […]

தமிழகத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு வழங்கப்பட்டு இருந்த முன் அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, (Delhi Special Police Establishment Act, 1946 Central Act XXV […]

பாலாஜியின் கைது நடவடிக்கையை தொடர்ந்து சட்டவல்லுநர்களுடன்‌ முதல்வர்‌ ஸ்டாலின்‌ சென்னையில்‌ உள்ள தனது இல்லத்தில்‌ ஆலோசனை மேற்கொண்டுள்ளார்‌. அமைச்சர்‌ செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில்‌ அவசர ஆலோசனையில்‌ ஈடுபட்டு வருகிறார்‌. செந்தில்பாலாஜி முக்கிய துறைகளின்‌ அமைச்சராக இருப்பதால்‌, மாற்று ஏற்பாடுகள்‌ குறித்தும்‌ ஆலோசனையில்‌ ஈடுபட்டுள்ளதாக தகவல்‌ வெளியாகியுள்ளது. போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட […]

ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியது தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர். அரசு நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் […]

மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுப்பிரியா, கூலித்தொழிலாளியான தமது தந்தையின் குடிப்பழக்கத்தால் தமது குடும்பத்தின் நிம்மதி குலைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தமது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி […]

ஒடிசா ரயில் விபத்து காரணமாக கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசா ரயில் விபத்து காரணமாக இன்று நடைபெற இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே நடைபெறும் என […]

அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு வழங்க இயலாத கையாலாகாத அரசாக திமுக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செம்மண் அள்ளிய திமுகவினரைத் தடுத்த துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தி.மு.க தலைவர் மகேஸ்வரன் மற்றும் அவரின் கூட்டாளிகளான […]

புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடா லேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களை சந்திக்க உள்ளார். இன்று முதல் சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார். […]

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ கட்சியின் உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழு கூட்டம்‌ நடைபெறும்‌ என பொதுச்செயலாளர்‌ துரைமுருகன்‌ அறிவித்துள்ளார்‌. திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழுக்‌கூட்டம்‌ நாளை காலை 10.30 மணி அளவில்‌ சென்னை அண்ணா அறிவாலயத்தில்‌ உள்ள திமுக அலுவலகத்தில்‌ உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழு கூட்டம்‌ நடைபெறும் என தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்‌. […]