பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஒரு முக்கியமான நிதியுதவித் திட்டமாகும். இதன் முக்கிய நோக்கம் கர்ப்ப காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் உறுதி செய்வதாகும். இதனால் தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்த உதவி நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. PMMVY என்பது மத்திய அரசின் ஒரு […]
modi
உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 100% கடன் உத்தரவாத காப்பீட்டை வழங்குவதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) உட்பட தகுதியான ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.20,000 கோடி வரை கூடுதல் கடன் வசதிகளை வழங்க முடியும். செயல்படுத்தல் உத்தி மற்றும் இலக்குகள்:குறு, சிறு […]
டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவிகள் பலியானதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் போராடுபவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் […]
2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை நேற்று சந்தித்தார்.. லோக் கல்யாண் மார்க் (Lok Kalyan Marg) உள்ள தனது இல்லத்தில், 2025 ICC மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வரவேற்று சந்தித்து பாராட்டினார். “நாங்கள் இறுதியாக கோப்பையை வென்றோம்” என்று மகளிர் அணித் தலைவி […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை “மிகவும் அழகான மனிதர்” என்றும், அவரை “போராளி” என்றும் வர்ணித்தார். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் அதிகாரப்பூர்வ தொடக்கத்திற்கு முன்னதாக தென் கொரியாவில் டிரம்ப் பேசினார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். முதல்வர் மோடி மிகவும் அழகான நபர். அவர் உங்கள் தந்தையுடன் நெருக்கமாக இருக்க விரும்பும் […]
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் 2.0-வின் கீழ் கூடுதலாக 1.41 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-வின் கீழ் கூடுதலாக 1.41 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்துறை செயலாளர் திரு ஸ்ரீனிவாஸ் கதிகிதலா தலைமையில் அக்டோபர் 15 அன்று நடைபெற்ற மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தின் போது இம்முடிவு […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் எண்ணெயை இந்தியா வாங்காது என்ற தெரிவித்ததை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி பிரதமர் டிரம்ப் மற்றும் அமெரிக்காவைப் பார்த்து பயப்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் அவரின் பதிவில் “ பிரதமர் மோடி டிரம்பைப் பார்த்து பயப்படுகிறார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவரது கருத்துக்களுக்கு முரணாக […]
ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித்திட்டத்தின் 21-வது தவணையை முன்கூட்டியே மத்திய வேளாண் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் நேற்று விடுவித்தார். பி.எம்.கிசான் என்பது, சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 பெறும் வகையில், இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவை வழங்குவதை […]
பாரம்பரிய ஞானமும், நிலையான வழிமுறைகளும் இந்திய வேளாண்மையின் ஆற்றல் சக்தியாக இருந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் பாரம்பரிய விவசாய வளர்ச்சித் திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.கடந்த 10 ஆண்டுகளில் இந்த திட்டம் இந்தியாவின் இயற்கை வேளாண்மை இயக்கத்தின் ஆணிவேராக […]
நுகர்வோர் விலைக் குறியெண் தொகுப்பில் இலவச பொது விநியோகத் திட்டப் பொருட்களின் கையாளுதல் குறித்த கலந்துரையாடல் அறிக்கை 2.0 வெளியிடப்பட்டுள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், நுகர்வோர் விலைக் குறியெண்ணின் (CPI) அடிப்படைத் திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த செயல்முறையில், விலை சேகரிப்பின் பரப்பை அதிகரித்தல், தற்போதுள்ள வழிமுறைகளைச் செம்மைப்படுத்துதல், புதிய தரவு மூலங்களை ஆராய்தல் மற்றும் விலை சேகரிப்பு மற்றும் குறியீட்டுத் தொகுப்பில் நவீன தொழில்நுட்பத்தை திறம்படப் […]

