உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சாலி பேகம் என்ற பெண்ணின் மாமியார் குழந்தை இல்லாததை காரணமாக காட்டி கண்டித்ததாக சொல்லப்படுகிறது.அதன் பிறகு மாமியாருக்கும் மருமகளுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலி பேகம் தன்னுடைய மாமியார் தனக்கு விஷம் கொடுத்து விட்டதாக தன்னுடைய சகோதரனை கைபேசியில் அழைத்து கூறியுள்ளார். குழந்தை பிறக்காததற்காக அந்தப் பெண்ணிடம் அவருடைய கணவர் அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சகோதரியின் […]

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் மல்லேஷ் (32). இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதூர் காடாம்பட்டியில் தங்கி செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். அதே செங்கல் சூளையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புதுவடவள்ளியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவருடைய மனைவி கலைவாணி(27) உள்ளிட்டோரும் தங்களுடைய ஒரு வயது பெண் குழந்தையுடன் வங்கி வேலை பார்த்து வந்தனர். இத்தகைய சூழ்நிலையில், கலைவாணியுடன் மல்லேஷுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது இந்த பழக்கம் […]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் கடந்த 6ம் தேதி பொறம்போக்கு நிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அந்த கிராம மக்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பள்ளத்தில் மனித உடலின் கை தெரிந்தது. இதன் காரணமாக, அதிர்ச்சிக்கு ஆளான கிராம மக்கள், அங்கு இருந்த பணித்தள பொறுப்பாளரிடம் இது தொடர்பாக தெரிவித்திருக்கின்றன இதனை தொடர்ந்து, பணித்தள பொறுப்பாளர் சாலவனூர் கிராம […]

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொத்தம்பட்டியில் குண்டாற்றுப் பாலத்தின் கீழ் நேற்று ஒருவர் முகம் மற்றும் தலையில் வளர்த்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில், கிடந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த துறையூர் காவல்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர் அதன் பிறகு இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். அதேபோல கொத்தம்பட்டியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொன்னர் சங்கம் பட்டி கிராமத்தில் கண்ணனூர் பாளையம் ஏரிக்கு […]

சிவகாசி அருகே உள்ள கிளியம்பட்டியை சேர்ந்தவர் பிலாவாடியான் இவருடைய மனைவி அந்தோணியம்மாள். இவர்களின் மகள் தங்கம்மாள் (25) வெம்பக்கோட்டை அருகே கல்லமநாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக இவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தங்கம்மாள் வேலைக்கு செல்வதற்காக புதிதாக ஸ்கூட்டி ஒன்றை வாங்கினார். தங்கமாரின் சித்தி மகனான ராஜபாளையத்தை சேர்ந்த மோட்ச ராஜா(23) என்பவர் ஒரு ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக் கொடுப்பதற்காக அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது […]

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5.52 மணி அளவில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோரிப்பாளையம் மதிச்சியம் பகுதியில் கள்ளழகரை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். அதோடு அங்கே காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர். இத்தகைய நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்பாக அதிகாலை 4 மணி அளவில் மதுரை அரசு மருத்துவமனை வினவருக்கு செல்லும் பகுதியில் 2 குழு மோதிக்கொண்டது. […]

சோனு என்ற பெண் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மன்புரா காட்டில் உள்ள ஒரு கிணற்றில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். 3 தினங்களுக்கு பின்னர் அவருடைய உறவினர்கள் அவரை காணவில்லை என்று புகார் வழங்கினர். முழுமையான காவல்துறையினரின் விசாரணைக்கு பிறகு சோனுவின் தாய் மற்றும் சகோதரரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் காவல்துறையினர் பல்வேறு விஷயங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். சோனு ஒரு இளைஞருடன் தொலைபேசியில் பேசுவது, அவருடைய தாய் மற்றும் சகோதரனை எரிச்சல் […]

டெல்லி திகார் சிறையில் பிரபல ரவுடி சுனில் தாஜ்பூரியா அவருடைய எதிரி கும்பலால் அடித்து கொல்லப்பட்ட சமயத்தில் குறைந்தது 10 காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள் என்பது தற்போது அம்பலம் ஆகியிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ரவுடி சுனில் மான் என்ற தில்லு தாஜ்பூரியா அவருடைய எதிரிகளால் திகார் சிறையில் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது சிறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் […]

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மொறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக லூர்தர் பிரான்சிஸ் என்பவர் பணியாற்றி வந்தார் இத்தகைய நிலையில், இவர் தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் மணலை கடத்தி செல்ல முயன்றது தொடர்பாக முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கு நடுவே கிராம நிர்வாக அதிகாரி அவருடைய அலுவலகத்தில் […]

ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கின்ற போரியா மாவட்டத்தில் உள்ள சட்கி என்ற கிராமத்தில் இருக்கின்ற காட்டுப் பகுதியில் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதே பகுதியில் அந்தப் பெண்ணின் உடைகள், பைக் சாவி உள்ளிட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டனர். அவற்றின் மூலமாக அடையாளம் காணப்பட்டதில் படுகொலை செய்யப்பட்ட பெண் அந்த பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளரான மாலோதி சோரன் என்று தெரியவந்தது அவருடைய கொலைக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் […]