கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(29). இவருக்கும் சீர்காழியில் அடுத்துள்ள அரசூரை சேர்ந்த ரோஜா(25) என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி சிதம்பரத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று இரவும் ரோஜாவும், சிலம்பரசனும் தகராறு செய்து கொண்டனர். இதில் வாக்குவாதம் […]

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள வி.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (40) இவரது மனைவி பானுமதி (34) இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 14 வருடங்களுக்கு கடந்துவிட்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளிட்ட இரு குழந்தைகள் இருக்கின்றன. குடிப்பழக்கத்திற்கு அடிமையான தேவராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்ததால் அவர் கோபித்துக் கொண்டு சின்னதகர குப்பத்தில் இருக்கும் தன்னுடைய […]

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன்( 65). இவரும், புலிப்பாக்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரும் பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடம் அக்டோபர் மாதம் இருவருக்கும் இடையில் தகராறு உண்டாகி உள்ளது. இதில் மனோகரனை கீழே தள்ளிவிட்ட சக்திவேல், அவரை தாக்கியுள்ளார். இதன் காரணமாக, தலையில் பலத்த காயமடைந்த மனோகரன் […]

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், 2வதாக பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதோடு பவித்ராவிற்கும் இது 2வது திருமணம் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் கடந்த சில தினங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற […]

மேட்டூர் அருகே உள்ள கருமலை கூடல் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல், இவருடைய மகன் சிபி(25). இவர் மீது கொலை வழிப்பறி அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு,கருமலைக்கூடல் காவல் நிலைய குற்ற பதிவேடு பட்டியலிலும் இவரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் புதுசாம்பள்ளியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதியில் கொடூரமான முறையில் இவர் […]

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் அசோக்குமார்(29) இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவருடைய உறவினரான ராணுவ வீரர் சுரேஷ்(27) என்பவருக்கும் இடையே வெகுகாலமாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே வழக்கறிஞர் அசோக்குமாருக்கு ஆதரவாக அவருடைய பெரியப்பா துரைராஜ்(57) என்பவர் பேசி வந்ததால் ஆத்திரம் கொண்ட ராணுவ வீரர் சுரேஷ் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் […]

புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டம் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன்(57). இவர் தனியார் நிறுவன காவலாலியாக வேலை பார்த்த வந்தார். இவருடைய மனைவி காளியம்மாள் என்கின்ற காஞ்சனா இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில், முத்துக்குமரன் நேற்று காலை புதுவை வெள்ளாளர் வீதியில் இருக்கின்ற வங்கி அருகே உள்ள வாய்க்காலில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த […]

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் செல்வகணபதி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (29). கார் ஓட்டுனராக இவர் பணிபுரிந்து வருகிறார் அதோடு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் இவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டு ள்ளது. பின்னர் விஜயலட்சுமி, சுரேஷ்குமார் இருவரும் கணவன் மனைவியை போல ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தான் நேற்று வழக்கம் போல சுரேஷ்குமார் வேலைக்காக கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது […]

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெண்ண வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு சக்திவேல்,,கார்த்திக் என்ற 2 மகன்கள் இருந்தனர். இத்தகைய நிலையில் தான் சக்திவேலும், அவருடைய சகோதரர் கார்த்திக்கும் நேற்று முன்தினம் இரவு கடுமையான மது போதையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது கார்த்திக்கின் மனைவி தன்னுடைய கணவரிடம் உங்களது தாயும் அண்ணன் மனைவியும் தொடர்ந்து என்னிடம் பிரச்சனை செய்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கார்த்திக் வீட்டிலிருந்தவர்களிடம் […]

கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் இருக்கின்ற பங்கார்பேட்டையில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி 20 வயதாகும் இவரது மகன் கீர்த்தியும், வேறு சமூகத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கங்காதர் என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதன் பிறகு கீர்த்தி தன்னுடைய தந்தையிடம் அவருடைய காதல் விவகாரம் பற்றி கூறியிருக்கிறார். ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ கங்காதர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை […]