நாகப்பட்டினம் மாவட்டத்தில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் ஒன்றியம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீரபத்திர பூபதி மற்றும் சாந்தி தம்பதி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மகள்கள் இருவரையும் நாகப்பட்டினத்தில் உள்ள அரசு கல்லூரியில் படிக்க வைத்திருக்கின்றனர் பெற்றோர். இந்நிலையில் அவர்களது மூத்த மகள் கல்லூரியில் படிக்கும் சக மாணவரோடு காதலில் இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த […]

தன் மனைவியின் புகைப்படத்தை நண்பருடன் சேர்ந்து முகநூலில் ஆபாசமாக பதிவிட்டு சித்தரித்து வந்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனைவி புகார் அளித்த சம்பவம் நாகப்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கடைசல் ரோடு பகுதியைச் சார்ந்தவர் சபிதா பேகம். இவருக்கு நாகப்பட்டினம் அருகே உள்ள பெரராவச்சேரியை உமர் பாரூக் என்பவருடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணத்தின் போது வரதட்சணையாக 40 பவுன் நகை ரொக்கம் மற்றும் சீர்வரிசை […]

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஈவு இரக்கமில்லாமல் கணித ஆசிரியர் கொடுத்த  தண்டனையால் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காரைக்குடியைச் சார்ந்த  இளையராஜா மற்றும் பாசமலர் தம்பதியின் ஒரே மகன் கவிப்பிரியன்  வயது 13. இந்தச் சிறுவன் அங்குள்ள வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான். இந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக  இருந்து […]

நாகப்பட்டினம் மாவட்ட பகுதியில் உள்ள நாகையில், தர்மகோவில் தெருவில் சிவபாண்டி( 34) என்ற ரவுடி வசித்து வருகிறார். இவரை மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பகுதியில் வைத்து ரவுடிகள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். ஏற்கனேவே இந்த ரவுடி மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன. இந்த நிலையில் நேற்றைய தினத்தில் இவரின் நண்பர்கள் இருவருடன், மக்கள் நெருக்கடி மிகுந்த அபிராமி அம்மன் சன்னதி பகுதியில் இருக்கும் டீக்கடை […]

நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் அரவிந்தன் என்ற இளைஞர் சிறு வயது முதலே ஓவியங்கள், சிற்பங்கள், உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்டவர். இவர் 4,000 மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். பென்சில் முனை, சோப்பு, சாக்பீஸ் உள்ளிட்டவற்றில் கார்விங் முறையில் அரவிந்த் பல உருவங்கள் எழுத்துக்களை செதுக்கி கலைத்திறனை காட்டி வருகிறார். இவரது சாதனை தொடர்ந்து வரும் நிலையில் தற்போது பென்சில் முனையில் 1330 குறட்பாக்களையும் செதுக்கி சாதனை செய்துள்ளார். […]