நேபாளம் நாட்டில் கடந்த மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். திடீரென பெருக்கெடுத்து ஓடிய கடும் காற்றாற்று வெள்ளத்தால், அந்நாட்டின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தின் பெரும்பகுதி ஒட்டுமொத்தமாக உருக்குலைந்து முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. வெள்ளத்தின் கோர பிடியில் சிக்கி வீடுகள், அரசு அலுவலகங்கள், பாலங்கள், போக்குவரத்துச் சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. […]