பஹாவல்பூரில் பயங்கரவாதத் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினரை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல் தாக்குதலை நடத்தியதாக ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.இ.எம்) தளபதி ஒப்புக்கொண்டதிலிருந்து பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் போலித்தனம் வெளிப்பட்டுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தின் தாரில் ‘பி.எம். மித்ரா பூங்கா’வைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் “ இன்று, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் உண்மையை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள், […]

பஹாவல்பூரில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த துல்லிய தாக்குதலில், ​​பயங்கரவாத மூளையாக செயல்பட்ட மசூத் அசாரின் குடும்பத்தினரை இந்தியப் படைகள் “துண்டு துண்டாக கிழித்தெறிந்தன” என்று ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.இ.எம்) தளபதி ஒருவர் ஒப்புக்கொண்டார்.. சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வைரல் வீடியோவில், “பயங்கரவாதத்தைத் தழுவி, இந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக டெல்லி, காபூல் மற்றும் காந்தஹார் ஆகிய நாடுகளுடன் போரிட்டோம். எல்லாவற்றையும் தியாகம் செய்த பிறகு, […]

ஆபரேஷன் சிந்தூரின் போது 6 பாக், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் இன்று தெரிவித்துள்ளார்.. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு, தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகள் ஐந்து பாகிஸ்தானிய போர் விமானங்களையும், வான்வழி கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு இராணுவ விமானமான AEW&C/ELINT விமானத்தையும் அழித்ததாகவும் அவர் கூறினார். பெங்களூருவில் நடந்த ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம். கத்ரே நிகழ்ச்சியில் […]

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மையங்கள் மீது இந்தியா நடத்திய பதிலடித் தாக்குதலான ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பகவான் மகாதேவருக்கு அர்ப்பணித்தார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) 26 பேரைக் கொன்றதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரையும், அதைத் தொடர்ந்து ஆபரேஷன் மகாதேவையும் தொடங்கியது. வாரணாசியில் ஒரு பொதுக் […]

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எல்லையோர மாவட்டமான பூஞ்சில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோரை இழந்த 30 குழந்தைகளை தத்தெடுத்த ராகுல்காந்தி, அவர்களின் கல்வி மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் எல்லையைத் தாண்டி பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்திய ஆயுதப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் […]

பஹல்காம் பயங்கரவாதிகளின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து கேள்வி எழுப்பிய ப.சிதம்பரத்தை அமித்ஷா கடுமையாக சாடினார். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பதிலடி கொடுத்துள்ளார்.. இன்று மக்களவையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய அவர், அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததற்கான […]

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்த சூழலில், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. கேள்வி நேரத்துக்கு பிறகு, பகல் 12 மணிக்கு ஆபரேஷன் […]

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் ராணுவத்தின் வலிமை பாதுகாப்பு உத்தி உள்ளிட்டவைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) உருவாக்கி வருகிறது என செய்தி நிறுவனமான PTI தெரிவித்துள்ளது. இந்த பாடத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். ஒன்று 3ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மற்றொன்று 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் […]