3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் […]

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு எனது மரியாதையும் வீரவணக்கமும்.. இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் முதன்மையானவராக விளங்கிய பாரதி கண்ட புதுமைப்பெண்.. தனது திட்டங்கள் மூலம் ஜெயலலிதா இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தார். தன்னை தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்த தன்னலம் பாராத உன்னத தலைவர் ஜெயலலிதா, பிரிந்தவர்களை இணைத்து 1991-ல் ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா.. எம்.ஜி.ஆரும், […]

2021 – 2026 திமுக ஆட்சிக்காலத்தின் கடைசி சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.. இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.. எனினும் இன்றைய கூட்டத்தொடரை அதிமுக புறக்கணித்துவிட்டது.. இந்த நிலையில் வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் மு.க ஸ்டாலினே முதல்வராக வர வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவு ஐயப்பன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. சட்டப்பேரவையில் பேசிய அவர் “ முதல்வர் […]

தமிழக அரசியல் களத்தில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” மீண்டும் ஒரு பிளவை சந்திக்க தயாராகி வருகிறது. அந்த அணியின் மூத்த அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், தற்போது ஓபிஎஸ் அணியிலிருந்து முற்றிலுமாக விலகி, “எம்ஜிஆர் அதிமுக” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் போன்ற முக்கிய முகங்கள் ஓபிஎஸ் அணியை […]

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து பேசிவந்த ஓபிஎஸ், தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதில் காட்டி வரும் தாமதம், தினகரனை ஆவேசமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. “மேடைக்கு மேடை ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று முழங்கியவர்கள், இப்போது கூட்டணி அமைய […]

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம்.பி தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தர்மர் முறைப்படி அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் ஆதரவால் எம்.பி பதவி பெற்ற தர்மர் அவருடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.. ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் பலரும் திமுகவுக்கு சென்ற நிலையில் தர்மர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர் தர்மர். […]

டெல்டா மாவட்டங்களின் அதிமுக முகமாக அறியப்பட்ட வைத்திலிங்கம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக தன்னை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.. அதற்கேற்றார் போல அவர் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்.. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்று தன்னை திமுகவில் […]

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்.. 2021-ம் ஆண்டு தேர்தலில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார் வைத்திலிங்கம். திமுகவில் இணைவதற்கு ஏதுவாக தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.. டெல்டா மாவட்டங்களின் அதிமுக முகமாக அறியப்பட்ட வைத்திலிங்கம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று […]

எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் “ அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆர் கனவு நிறைவேறும்.. கழகப் பொதுச் செயலாளர் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதி.. இது தான் கழகத்தின் சட்டவிதி.. இந்த சட்டவிதியை […]