சென்ற 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவருடைய வேட்பு மனதில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்து இருப்பதால் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை […]
OPS
இன்று தஞ்சையில் நடந்த முன்னாள் அமைச்சர் ஆர் வைத்திலிங்கம் அவர்களின் மகன் திருமண விழாவில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினார். அப்போது டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட இருவரும் ஒரே மேடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது பேசிய டிடிவி தினகரன் சிலரின் சுயநலம் பேராசை உள்ளிட்டவை காரணமாக 6 வருடங்களுக்கு முன்னர் அதிமுகவிலிருந்து பிரிந்து மிக கனத்த இதயத்துடன் அம்மா மக்கள் […]
அதிமுக அலுவலக மோதலின் போது பன்னீர்செல்வம் தரப்பினரால் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்படும் தற்போது ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆவணங்களை அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் பெற்றுக் கொண்டார்.
இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறையாக தேர்ச்சி பெற்று 13,000 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆணையில், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்றும்பின்னர் அவர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக செவிலியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியும் மேற்படி 13,000 செவிலியர்களில் […]
சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரின் சந்திப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு தொடர்பாகவும் எதிர்கால அரசியல் திட்டம் தொடர்பாகவும் டிடிவி தினகரன் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது பன்னீர்செல்வம் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் அதிமுகவிலிருந்து நீக்கபட்டவுடன் சையது கான் என்ற எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் நாங்கள் […]
தமிழக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் நேற்று கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது சென்ற காலங்களை மறந்து விட்டு ஒன்றிணைந்து இருக்கின்றோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இருவரும் […]
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நியமனம் செய்யப்பட்ட போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓ.பி.எஸ் அளித்துள்ளார். இது குறித்து ஓ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில்; அதிமுகவில் கழக பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும், கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை அப்பதவியிலிருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கியும், கழகத்தின் நிரந்தரப் பொதுச் […]
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு இடையில் ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாக, எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனாலும் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டுவார வேண்டும் என்று தொடர்ந்து பன்னீர்செல்வம் முயற்சித்து வந்தார். ஆனாலும் அவருடைய முயற்சிக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. தேர்தல் ஆணையம் முதல் கொண்டு பன்னீர் செல்வத்திற்கு எதிராகவே இருக்கிறது. இந்த நிலையில், அதிமுகவிலிருந்து அதிரடியாக […]
திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் அதிமுகவின் பொன்விழா ஆண்டு கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா என்று முப்பெரும் விழா மாநாடு ஓபிஎஸ் அணி சார்பாக நடத்தப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 25,000க்கும் அதிகமானோர் பங்கேற்றுக் கொண்டனர். இதில் பேசிய ஓபிஎஸ் தொண்டர்களை ஒன்றிணைக்கும் தர்மயுத்தம் நடந்து வருகிறது இன்று முதல் நம்முடைய தர்மயுத்தம் ஆரம்பமாகிறது. அதிமுகவை அழிப்பதற்கு திட்டமிடும் […]
ஓபிஎஸ் அணி சார்பில் நாளை முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இரு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டியது. அப்போது பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இது செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னுடைய […]