கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத விதத்தில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் அதிமுக ஆட்சியை இழந்தது. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அதிமுக இபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி இரண்டாக பிளவு பட்டு இருந்தது. இருவரும் இரு பிரிவினராக பிரிந்திருந்தால் நிச்சயமாக வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்து கொண்ட […]

சென்னை பெசன்ட் நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “ஓபிஎஸ் மகன் அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதிமுக கட்சி தொண்டர்களை குழப்ப வேண்டும் என ஓபிஎஸ் பேசியுள்ளார். நாங்கள் தான் அதிமுக கட்சி; நாங்கள் எதற்காக தனிக்கட்சி துவங்க வேண்டும். ஓபிஎஸ் வேண்டும் என்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை துவங்கலாம். நாம் ஒருவர் […]

வருகின்ற 21-ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் 80 சதவீதத்திற்கு மேல் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு விரைவில் பொதுக்குழு நடைபெறும் என ஓபிஎஸ் கூறியிருந்தார். சட்டப்போராட்டம் ஒருபுறம் இருக்கக் களத்தில் எடப்பாடி தரப்பை எதிர்ப்பதற்கு பன்னீர்செல்வம் அணியினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இது […]

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த பொதுக்குழு கூட்டத்திலேயே மற்றொரு அறிவிப்பையும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதாவது, விரைவில் தொண்டர்களின் ஒப்புதலுடன் நிரந்தர பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை […]

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றம் முன்பு எடுத்து வைக்க அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தின் கலாச்சாரப் பெருமையினை நிலை நிறுத்திடும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி அமைந்துள்ளது. ஜல்லிகட்டிற்கு தடை வந்த போது அவசர சட்டம் கொண்டு வந்து தடையை நீக்கியது அதிமுக அரசு. திமுக அங்கம் வகித்த மத்திய அரசு 2011-ம் ஆண்டு […]

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சரான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர், “சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் செய்த ஓபிஎஸ் அவரிடமே சரணடைந்துள்ளார். இது தர்ம யுத்தம் 2.0 அல்ல, கர்ம யுத்தம். ஓபிஎஸ் அதிமுக அரசையே எதிர்த்து வாக்களித்துள்ளார். மேலும், புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகையை உடைத்து மற்றும் ஜெயலலிதாவின் அறையையும் […]

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை 01‌.07.2022 முதல் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எவ்வித நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்காததோடு, மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியைக்கூட வழங்காமல் காலந்தாழ்த்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக மக்களின் […]

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பினை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய மருத்துவர்களுக்கான பயிற்சி வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வேண்டுமென்றால், அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றிப் பாதுகாத்தல் மிக அவசியமாகும். ஏனென்றால், மக்களின் நலம் தான் ஒரு நாட்டின் உடைய எதிர்காலத்தை முடிவு செய்கிறது. ஒரு நாட்டினுடைய எதிர்காலத்தை […]

பருவமழையின் போது, ஆங்காங்கே தோண்டப்பட்டு இருக்கும் பள்ளங்களை சுற்றி வைக்கப்பட்டு இருக்கும் தடுப்புகளை கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்; பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவது, தெருக்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்துவது, வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வது, பருவமழை துவங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை ஒரு மாநில அரசின் முக்கியமான கடமைகளாகும். […]

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயசந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த […]