குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வேலையில் இருந்து 31.03.2025-ம் தேதியோ அல்லது அதற்கு முன்ன்னதாகவோ பணியிலிருந்து ஓய்வு பெற்ற மத்திய அரசுப் பணியாளர்களில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சந்தாதாரர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வமான திருமணத் துணைவர் ஏற்கனவே கோரப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சலுகைகளுக்கும் கூடுதலாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பின்வரும் கூடுதல் சலுகைகளைப் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட ஆறு மாத தகுதிவாய்ந்த […]
pension
ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2,750 வழங்கப்படும். ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2,750 வழங்கப்படும். இந்த பயனாளிகள் 60 வயதை அடைந்தவுடன், அவர்கள் தானாகவே முதியோர் ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியானவர்கள் என கல்யாணம் முதல் அமைச்சர் மனோகர் தெரிவித்துள்ளார். இது குறித்து […]
தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதார்களுக்கு நேர்காணல் செய்து கொள்ள புதிய வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக புதிய அறிவிப்பாணைப்படி, சேலம் மாவட்ட கருவூல அலகில் ஓய்வூதியம் பெறும் குடிமை ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஆசிரியர் ஓய்வூதியம் பெறுபவர்கள், தாங்கள் ஓய்வு பெற்ற மாதம் மற்றும் இந்த மாதத்திற்குள் நேர்காணல் செய்திட வேண்டும். குடிமை குடும்ப ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர் குடும்பஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்கள் […]
ஓய்வூதியதாரர்கள் வாழ்வுச் சான்றை சமர்ப்பிக்கும் புதிய நடைமுறை ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ஓய்வூதியதாரர்கள் தங்களது உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான வாழ்வுச் சான்றை அளிக்க ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும். இணைய சேவை மையங்கள், அஞ்சல் வழி, கருவூலகணக்குத் துறையில் நேரடியாக சமர்ப்பித்தல் உள்ளிட்ட வழிகளில் வாழ்வுச் […]
அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் ஜுன் மாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 07.06.2023 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் […]
அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் மே மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அகில இந்திய அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் 17.05.2023 அன்று பகல் 11:00 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம் சென்னை என்கிற […]
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கை 31, மார்ச், 2023-ன் படி, 5.20 கோடியை கடந்தது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டனர். இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகும். அடல் ஓய்வூதியத் திட்டத்தில் மேலாண்மையின் கீழ், இதுவரை மொத்த சொத்து மதிப்பு ரூ.27,200 கோடியாக உள்ளது. இந்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 8.69 சதவீதம் முதலீட்டு லாபம் […]
அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கான ஓய்வூதியம் மேலும் உயர்த்தி வழங்கப்படும் […]
விளையாட்டு வீரர்கள் பென்ஷன் பெறுவதற்கு ஏப்ரல் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2023-2024 ஆம் ஆண்டிற்கான நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தினை சார்ந்த முன்னாள் தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளையாட்டுத் துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத […]
கணவரை இழந்த பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும், மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 66 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.. இதே காலகட்டத்தில் கடற்படையில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 28 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2017-2018-ம் ஆண்டு முதல் 2021-22-ம் […]