திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சற்றுமுன் ராமதாஸ் அறிவித்த நிலையில், திலகபாமாவே பொருளாளராக நீடிப்பார் என அன்புமணி அறிவித்துள்ளார். பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார. இதனால் தந்தை மகன் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அன்புமணி ராமதாஸ் கட்சியின் மாவட்ட […]

பாமகவில் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு இன்று மேலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீதே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், “அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன், தவறு செய்தது அன்புமணி அல்ல 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்து விட்டேன். இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரைகளை […]

இந்தியாவில் புல்லட் ரயில் கொண்டு வருவதை விட நிதி ஒதுக்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு வரவேண்டியது தான் முக்கியம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தருமபுரியில் கடந்த 15 நாட்களாக கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. பல அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதிப்போட்டியை அன்புமணி ராமதாஸ் கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார். போட்டி முடிந்த பிறகு வெற்றி பெற்ற அணிகளுக்கு […]

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில், ஜுன் 1-ம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக […]

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதிவு தன்னுடைய கவனத்தை மத்திய அரசு செலுத்தி வருகிறது. 6வது நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வான 29 சுரங்கங்களின் நிலக்கரி விற்பனை குறித்த ஏழாவது சுற்று ஏலம் சென்ற மார்ச் மாதம் 29ஆம் தேதி அதன்படி ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, பீகார், சத்தீஸ்கர் போன்ற 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் புதிதாக அமைப்பதற்கு ஏலம் கோரப்பட்டது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் டெல்டா […]

அதிமுகவின் 8வது பொதுச்செயலாளராக நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கின்ற வாழ்த்து செய்தியில் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய […]

என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், நெய்வேலியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், என்எல்சி சுரங்கங்களால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிப்படைந்து இருப்பதாகவும் ஸ்டெர்லைட் ஆலையை விட என்எல்சி நிறுவனம் 100 மடங்கு ஆபத்தானது எனவும் கூறினார் […]

வேலூர் சித்தேரி பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பிரகாஷ் (26) ,அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்( 40) இவர் பிளக்ஸ் பேனர் கடை நடத்தி வருகின்றார். நடந்து முடிந்த மாநகராட்சி வார்டு தேர்தலில் 59வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கட்டிட தொழிலாளி பிரகாஷும், ராமகிருஷ்ணனும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டனர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை பிரகாசுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு ராமகிருஷ்ணனை புறக்கணித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் […]

கடலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாமகவின் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசிய வசனங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்து  தற்போது நிலக்கரி எடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைக் கண்டித்தும் அவர்கள் ஏராளமான பொதுக்கூட்டங்களை நடத்தி வருவது  நாம் அறிந்ததே. அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் அன்புமணி […]