தர்மபுரியில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் நடத்தி வந்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவ மற்றும் ஊடகத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலி மருத்துவர்கள் ஒழிப்பு குழுவினர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் […]
police arrest
திருவண்ணாமலையை அடுத்த கண்ணமடை காப்புக்காடு பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிரமான விசாரணையையும் மேற்கொண்டு வந்தனர். ஒரு பெண்மணி எதற்கு இந்த காட்டுப் பகுதிக்கு தனியாக வந்தார் அவர் கொலை செய்யப்பட்டாரா?இல்லை அவரை யாரும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா […]
டேட்டிங் ஆப்பின் மூலம் சந்தித்த பெண்ணை அடித்து சித்திரவதை செய்து தன் வீட்டின் அடித்தளத்தில் அடைத்து வைத்திருந்த அமெரிக்க இளைஞரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. அமெரிக்காவின் ரிவர் டயல் நகரைச் சார்ந்த பெண் ஒருவர் டேட்டிங் அப்ளிகேஷன் மூலம் அப்பகுதியை சார்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி இருக்கிறார். இந்நிலையில் இருவரும் சந்திக்க முடிவு செய்து இருக்கின்றனர். அப்போது அந்த இளைஞரை சந்திப்பதற்காக அவரது தாய் வீட்டிற்குச் சென்று அந்தப் […]
பீகாரில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வந்த ஆயுத தொழிற்சாலை கண்டுபிடித்து மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றி வந்த 10 நபர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர் மேலும் அவற்றிலிருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படும் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் பீகார் மற்றும் கொல்கத்தா சிறப்பு காவல் படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வந்த ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்த அங்கு […]
வேலூர் நகரில் இன்ஸ்டாகிராம் காதலிக்காக 11 சவரன் நகைகளை திருடிய 19 வயது இளைஞரை கைது செய்து இருக்கிறது. நரேஷ் குமார் என்பவர் வேலூர் நகரில் வசித்து வருகிறார். சிவராத்திரியை முன்னிட்டு இவர் குடும்பத்துடன் வேலூர் கோட்டையில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் பெற்றுவிட்டு அதிகாலையில் வீடு திரும்பியிருக்கிறார். வீட்டை திறந்து பார்த்தபோது இவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. வீட்டில் நகைகள் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 11 […]
ஒடிசா மாநிலத்தில் யானை தந்தம் கடத்தியது தொடர்பாக இரண்டு நபர்களை அம்மாநில காவல்துறை கைது செய்திருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் மைத்திரி விகார் பகுதியைச் சார்ந்த காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்தபோது சைனிக் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக இரண்டு நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் யானை தந்தங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளது காவல்துறை. […]
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் 32 வயது இளைஞர் ஒருவர் தனது மனைவியை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஆர்யா நகர் பகுதியைச் சார்ந்தவர் வன்சிகா. இவருக்கும் அப்பகுதியைச் சார்ந்த நரேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த சிறிது நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் […]
ஒடிசா மாநிலத்தின் பொருளாதார குற்றப்பிரிவு 17 மாநிலங்களில் கைவரிசையை காட்டி வந்த இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு மோசடி கும்பலை கைது செய்துள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தரம்பால் சிங் பீகாரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் மத்திய அரசு வேலை வாய்ப்பு பணிகளைப் போலவே இணையதள பக்கங்களை உருவாக்கி அவற்றில் வேலை வாய்ப்புகளை பற்றிய விபரங்களை பகிர்ந்து அதன் மூலம் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக […]
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக முகநூலில் விளம்பரம் செய்து அதன் மூலம் 50 நபர்களிடமிருந்து 91 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை சென்னை ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் மணியம் ஆத்தூர் பகுதியைச் சார்ந்தவர் சைலேஷ். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வந்த முகநூல் விளம்பரத்தை பார்த்து சென்னை ஆவடியைச் சார்ந்த அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு உள்ளார். அந்த நிறுவனத்தில் ஆவடி காமராஜ் […]
இந்திய தலைநகர் டெல்லியில் தத்தெடுத்த சிறுமியை கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் சப்தார்ஜங்க் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருபவர் ரேணுகுமாரி. 50 வயதான இவர் தனது உறவினர் ஒருவரின் ஏழு வயது மகளை தத்தெடுத்துள்ளார். அந்தக் குழந்தை அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகளின் உடலில் காணப்பட்ட காயங்களை கண்டு அதிர்ச்சி […]