மதுரையில் இளம்பெண் ஒருவர் விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை ஆனையூர் செந்தூர் நகரைச் சார்ந்தவர் பிரித்விராஜன். இவரது மகள் லத்திகா வயது 19. இவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினர் போலவே லத்திகாவும் அதிகமாக செல் போனை பயன்படுத்தி வந்திருக்கிறார். இதன் காரணமாக அவரது தந்தை லத்திகாவை […]
police investigation
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சைக்கிளில் சென்ற மூன்று மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையம்பட்டு கிராமத்தைச் சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சைக்கிள் மூலமாக அங்குள்ள அரசு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வளையம்பட்டு மேம்பாலம் அருகே அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் மாணவர்களின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த […]
மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் விரக்தி அடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி அருகே உள்ள மாந்துறை நெடுஞ்சாலை பகுதியைச் சார்ந்தவர் ராஜா வயது 30. இவர் கட்டிட வேலை செய்யும் கொத்தனாராக இருந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவியும் ஏழு வயதில் ஒரு மகளும் ஐந்து வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். உள்ளூரில் […]
நாகர்கோவில் அருகே சவாரிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியைச் சார்ந்தவர் கிறிஸ்துராஜ். ஆட்டோ ஓட்டுநராக இருந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவாரி செல்வதாக வீட்டில் கூறி விட்டு வெளியே சென்று இருக்கிறார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் […]
மதுரை அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சார்ந்தவர் பேச்சியம்மாள் 80 வயதான இவர், சம்பவம் நடந்த இரவு அன்று தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார். காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது 55 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென மூதாட்டியின் […]
தனது மகனைகொல்கத்தா ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு அஸ்ஸாம் சென்று ராணுவ அதிகாரியை பார்க்கச் சென்ற தமிழ் பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அசாம் மாநிலத்தின் காமரூப் மாவட்டம் சங்கசாரி என்ற பகுதியில் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் சாலை ஓரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக உடலை கைப்பற்றிய போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். காவல்துறையின் விசாரணையில் […]
நிஜாமாபாத் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் இறுதி ஆண்டு மாணவர் இறுதி ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினரின் தகவலின்படி 22 வயதான தசரி ஹர்ஷா என்ற மாணவர் தான் தற்கொலை செய்து இருக்கிறார். வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களுடன் அமர்ந்து நன்றாக சிரித்துப் பேசி விட்டு தனது அறைக்குச் சென்ற ஹர்ஷா அதன் […]
சென்னை கோயம்பேடு அடுத்துள்ள நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (48) இவர் சினிமா பைனான்சியராக இருந்தவர் இவருடைய வீட்டில் ஒருவரை அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்து வந்ததாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது வீட்டில் இருந்தவர்கள் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு, வீட்டின் அறையில் மற்றும் ரத்த கரைகள் இருந்ததாக சொல்லப்படுகின்றது. மேலும் காவல்துறையினர் வீட்டில் இருந்த நபர்களை தீவிரமாக […]
டெல்லியின் உத்தம் நகரில் உள்ள ஓயோ ஹோட்டல் அறையில் 19 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் உறவினர்கள் துவாரகா மாவட்டத்தில் உள்ள தப்ரி காவல் நிலையத்தில் தங்கள் வீட்டுப் பெண்ணை காணவில்லை என புகார் அளித்துள்ளனர். அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முடியாததால் […]
சென்னை மாதவரம் பகுதியில் திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை மாதவரத்தை அடுத்த 200 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கிறது. அதனை ஒட்டி இருக்கும் லேத் பட்டறை அருகில் கனரக வாகனங்களை நிறுத்துவது வழக்கம். அந்தப் பகுதியில் லாரியை நிறுத்தி இருந்த மணலியைச் சார்ந்த ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தை எடுப்பதற்காக சென்று இருக்கிறார். அப்போது அவரது லாரி அருகே […]