தந்தை மீதான புகாரில் அவரது மகன்களை அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரை அலங்காநல்லூரில், அப்பாவுக்கு பதிலாக மகன்களை பிடித்து போலீசார் விசாரித்த மற்றொரு வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நீ வந்தால் தான் உன் அப்பா வருவார் என்று மிரட்டி, அவரது இரண்டு மகன்களையும் போலீசார் காவல் […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் அடிப்பது போன்ற வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இதனிடையே […]

போலீசாரை குற்றவாளிகள் தாக்க முயன்றால் தற்காப்புக்காக அவர்களை துப்பாக்கியால் சுடுவதற்கு போலீசார் தயங்கக்கூடாது என போலீசாருக்கு கேரள ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி ஒருவரின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி உள்ளனர். அப்போது ஏற்பட்ட சலசலப்பில் ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது பயங்கரவாத ஆயுதங்களை […]

திருப்புவனம் அருகே காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்த அஜித்தின் வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.. அதாவது அஜித் மீது திருட்டு புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு பதிவாகியுள்ளது.. வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக 2011-ம் ஆண்டு நிகிதா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. 2010-ல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று நிகிதா மோசடி செய்துள்ளதாக எஃப்.ஐ.ஆர் பதிவாகி உள்ளது. பணத்தை […]

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அதில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், மூன்று மாநிலங்களின் சந்திப்பாக திகழும் முக்கிய பகுதி. இங்கிருந்து மைசூர் நோக்கி ஒரு தேசிய நெடுஞ்சாலையும், வயநாடு, மலப்புறம் நோக்கி மாநில நெடுஞ்சாலைகளும் செல்கின்றன. இதனால் கூடலூர் பகுதியில் இரவு பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு […]

சென்னை பரங்கிமலை காவல் நிலையம் வாசலில் இன்று சவுக்கு சங்கர் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது என்னையும் அஜீத் மாதிரி அடிப்பீங்களா? போலீஸ் அராஜகம் மக்களுக்கும் தெரியட்டும் என கோஷமிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சவுக்கு மீடியா கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசால் எத்தனை கொடுமைகளை சந்தித்து கொண்டு இருக்கிறது என எல்லாருக்கும் தெரியும். என் வீட்டில் மலம் ஊற்றப்பட்டது. சாக்கடை ஊற்றப்பட்டது. என் மீது […]

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் கடைகளில் இருந்து சமோசாக்களை லஞ்சமாக வாங்கி கொண்டு வழக்கை முடித்து வைத்ததாக சிறுமியின் தந்தை மனுதாக்கல். கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று 14 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரேஷ் என்பவர் சிறுமியை பக்கத்தில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து […]