குடியேற்றத்துக்கு எதிரான போராட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லாரன் டோமாசி மீது ரப்பர் தோட்டாவால் போலீஸ் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் குடிபெயர்ந்தவர்களை நாடு கடத்தும் முயற்சியில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீவிரமாக இறங்கியுள்ளார். குடிபெயர்ந்தவர்களை கண்டறிந்து கைது செய்ய லாஸ் ஏஞ்சல்ஸில் தேசிய காவல்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ட்ரம்பின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அமெரிக்க மக்கள் […]
Protest
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற டிபிஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழக முழுவதிலும் இருந்து வந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று கொண்டனர். இது தொடர்பாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்ததாவது, திமுக ஆட்சிக்கு வந்து இன்னும் தேர்தல் வாக்குறுதையில் அறிவித்தபடி பகுதி நேர ஆசிரியர்களை […]
கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழ் முழுவதும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய், சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு […]
தமிழகத்திற்கு 10 வருடங்களுக்கு மேலாக ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய நிலையில், அந்த நிறுவனம் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தினார். ஆகவே இன்று காலை முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50ற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தகவல் வந்ததை தொடர்ந்து, இந்த சோதனை நடைபெற்று வருவதாக […]
ராகுல் காந்தி சிறை தண்டனை தீர்ப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியதுடன், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் […]
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக காளிமுத்து என்பவர் பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவர் உயிரிழந்த பிறகு அவருடைய வேலை கருணையின் அடிப்படையில் அவருடைய மனைவிக்கு வழங்கப்பட்டது. அந்த விதத்தில் அந்த பெண் திசையன்விளை சிறப்பு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். அந்த பகுதியில் உள்ள பேரூராட்சி சுகாதார ஆய்வாளராக நவராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார் இவர் தூய்மை பணியாளரான அந்த பெண்ணுக்கு ஆபாசமாக […]
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் டிராக்டர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற நபர் கடந்த 10 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 12ஆம் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய […]
இந்தியாவின் மராட்டிய மாநில பகுதியில் உள்ள சோலாப்பூரில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத பல ஆண்கள் இணைந்து புதிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஆண்கள் சிலர் மணமகன் போன்று ஆடையணிந்து கலந்து கொண்டுள்ளனர். மேலும் சிலர் மணமகன் போல் அலங்காரத்தினை செய்து கொண்டு வாத்தியங்கள் முழங்க குதிரையில் ஊர்வலமாக வந்து பேரணியில் ஈடுபட்டனர். அத்துடன் அவர்கள் தங்களுக்குத் திருமணம் செய்வதற்கு அரசு மணப்பெண் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கோரியை மாவட்ட […]
கவிஞர் வைரமுத்து தலைமையில் இந்தி மொழி திணிப்பை கண்டித்து சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது உரையாடிய கவிஞர் வைரமுத்து, “2022-ல் இந்தி எதிர்ப்பு பற்றி தமிழர்களிடம் கூடுதல் எழுச்சி ஏற்பட வேண்டும். இது கடந்த 1965 விட வலுவானதாக இருக்க வேண்டும். சமீப காலமாக பல இடங்களில் இந்தி மொழி திணிப்பு நடைபெற்று வருகிறது. அத்துடன் இந்தி மொழி தெரியாதவர்கள் மத்திய அரசுடைய பணிகளில் […]