ராணிப்பேட்டை முத்துக்கடையில் விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் மக்கள் எழுச்சி பேரணியின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து அவர் பேசியதாவது: ஆளும் பாஜக அரசாங்கம் மதம் வேண்டும் என செயல்படுகிறது. மதம் மக்களுக்கானது. அரசாங்கத்திற்கு ஆனது இல்லை என அம்பேத்கர் எழுதிய சட்டத்தில் உள்ளது. மதத்தின் மீது பற்றுள்ள மகாத்மா காந்தியே அம்பேத்கரின் கருத்தை ஏற்றுக்கொண்டார். காங்கிரசோடு நமக்கு வேறுபாடுகள் […]

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திமுக, நாதக, அமமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு அதிமுக அடையாள அட்டை வழங்கி, தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல திமுகவை சேர்ந்த பலர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் […]