சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். இனி இதுபோன்ற கருத்துகளை பேசமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, தனது பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக ஏற்கனவே மன்னிப்பு கேட்டதாகவும், தற்போது மீண்டும் உளமாற வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், தன்னை எதிர்த்து வழக்கு தொடர்ந்த […]

