சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இதனுடைய மகள் மற்றும் மருமகன் துபாயில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு ஒன்று ரெட்டிபட்டி பகுதியில் இருக்கிறது. தன்னுடைய மகளின் வீட்டிற்கு பழனிச்சாமி அவ்வப்போது வந்து கண்காணித்து செல்வது வழக்கம். அதோடு இந்த பங்களாவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் பழனிச்சாமியின் மகள் துபாயில் இருந்து கண்காணிப்பு கேமரா மூலமாக வீட்டை கண்காணிப்பது வழக்கமாக […]

சேலம் மறவனேரி 7வது குறுக்குத் தெருவில் இருக்கின்ற சின்னையா பிள்ளை தெருவை சேர்ந்த நூல் வியாபாரி திருநாவுக்கரசு(66) இவருடைய மனைவி மல்லிகா(62) இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். மூவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு சூரமங்கலத்தில் உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தம்பதிகள் இருவரும் வீடு திரும்பினர். மல்லிகா அணிந்திருந்த நகைகளை கழற்றி அருகே இருந்த கண்ணாடி நேசையின் மீது […]

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காவல்துறையில் காலியாக உள்ள 621 உதவி ஆய்வாளர் பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) இத்தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 30-ம் தேதி […]

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி ஊராட்சி பகுதியை சேர்ந்த மூதாட்டி ராமாயி(78) இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன் இயற்கை எய்திவிட்டார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்ற நிலையில், மூத்த மகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். மற்ற இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் ராமாயி தன்னுடைய சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. ஆகவே கடந்த 21 ஆம் தேதி […]

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் பகுதியில் சாக்கு முட்டையை வைத்து ஒருவர் கள்ளச்சாராய விற்பனை செய்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்பனை செய்வதும் சாராயம் விற்பனை செய்யும் இடத்தில் இளைஞர் ஒருவர் பாக்கெட் சாராயத்தை குடிப்பது போன்று அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார் உத்தரவின் அடிப்படையில், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக […]

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை அடுத்துள்ள செங்கல் அணை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகணபதி (42). இவருடைய மனைவி மீனாவை பிரிந்து இவர் பெற்றவுடன் சிங்களனை பகுதியில் இருக்கின்ற தன்னுடைய வீட்டில் வசித்து வந்தார். அவருடைய வீட்டின் மேல் தரத்தில் ராஜ கணபதியின் அண்ணன் செல்வம் அவருடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தான் பெற்றோரின் பெயரில் இருக்கின்ற வீட்டை 2 பாகங்களாக பிரித்து அண்ணனுக்கும், தனக்கும் அவரவர்க்குரிய […]

சேலம் மாவட்டம் ஜாகீர் ரெட்டிப்பட்டி ஓடை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (31), இவருடைய மனைவி மணிமேகலை(28). இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில்தான் ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மேலும் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அந்த வகையில், நேற்று முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மணிமேகலை அடித்து புதைத்து துன்புறுத்தி இருக்கிறார். அதன்பிறகு அவர் தூங்குவதற்காக சென்று விட்டார் […]

சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம். இவருடைய மகன் உதயசங்கர்(30) இவர் வெள்ளிப் பட்டறையில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் பாஜகவின் மாநகர இளைஞரணி செயலாளராக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், நேற்று மாலை பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதயசங்கரை வெட்ட முயற்சி […]

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினரின்‌ பொருளாதார மேம்பாட்டிற்கு கடன்‌ பெற விண்ணப்பங்கள்‌ வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்‌ பொருளாதார சமேம்பாட்டுக்கழகத்தின்‌ கீழ்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்கள்‌ சுயதொழில்‌ செய்து பொருளாதார மேம்பாடு அடைய 2023-ஆம்‌ நிதியாண்டிற்குரிய கடன்‌ திட்டங்கள்‌ வழங்குவதற்கான விண்ணப்பங்கள்‌ மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. சிறு தொழில்கள்‌ மற்றும்‌ வியாபாரம்‌ செய்ய பொது காலக்கடன்‌, பெண்களுக்கான புதிய […]

அரசு அலுவலகங்களில்‌ பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான மாவட்ட ஓய்வூதியர்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ ஜுன் மாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில்‌ பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின்‌ ஓய்வூதியப்‌ பலன்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியம்‌ பெறுவதில்‌ ஏதேனும்‌ குறைகள்‌ இருப்பின்‌ அதனை நிவர்த்தி செய்யும்‌ பொருட்டு, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ வருகின்ற 07.06.2023 புதன்கிழமை காலை 10.30 மணியளவில்‌ […]