சேலம் மாவட்டம் ஜாகீர் ரெட்டிப்பட்டி ஓடை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (31), இவருடைய மனைவி மணிமேகலை(28). இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில்தான் ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மேலும் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அந்த வகையில், நேற்று முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மணிமேகலை அடித்து புதைத்து துன்புறுத்தி இருக்கிறார். அதன்பிறகு அவர் தூங்குவதற்காக சென்று விட்டார் […]
Salem
சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம். இவருடைய மகன் உதயசங்கர்(30) இவர் வெள்ளிப் பட்டறையில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் பாஜகவின் மாநகர இளைஞரணி செயலாளராக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், நேற்று மாலை பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதயசங்கரை வெட்ட முயற்சி […]
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு கடன் பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார சமேம்பாட்டுக்கழகத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் சுயதொழில் செய்து பொருளாதார மேம்பாடு அடைய 2023-ஆம் நிதியாண்டிற்குரிய கடன் திட்டங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக்கடன், பெண்களுக்கான புதிய […]
அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் ஜுன் மாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 07.06.2023 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் மல்லேஷ் (32). இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதூர் காடாம்பட்டியில் தங்கி செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். அதே செங்கல் சூளையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புதுவடவள்ளியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவருடைய மனைவி கலைவாணி(27) உள்ளிட்டோரும் தங்களுடைய ஒரு வயது பெண் குழந்தையுடன் வங்கி வேலை பார்த்து வந்தனர். இத்தகைய சூழ்நிலையில், கலைவாணியுடன் மல்லேஷுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது இந்த பழக்கம் […]
சேலம் அருகே கடையம்பட்டி ஜோடுகுளி என்ற பகுதியில் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி செல்வம்( 63) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 2 ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் ஒரு ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளை அடிக்க 3 பேர் முயற்சி செய்திருக்கிறார்கள். அப்போது ஒருவர் வெளியே பாதுகாப்புக்காக நின்றார் மற்ற இருவரும் காஸ் சிலிண்டரை வைத்து கேஸ் […]
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் அஞ்சல் துறையின் மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கினைத் துவங்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் சேலம் மாவட்டத்தில் 2022-2023ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி […]
சேலம் மாவட்டத்தில் SSC-CGL. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 04.05.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் 7,500 -ற்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இன்று […]
தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக போக்சோ உள்ளிட்ட பல அதிரடி சட்டங்கள் இயற்றப்பட்டனர். ஆனாலும் இது போன்ற குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆங்காங்கே நாள்தோறும் பாலியல் குற்றங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. இருந்தாலும் இதனை தடுத்ததற்கு மாநில அரசும் காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் தமிழகத்தில் என்று மது முழுமையாக ஒழிகிறதோ அப்போதுதான் பெண்கள் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெடி மருந்துகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம், மேட்டூர் அணைப் பகுதியில் மீன்வளத்துறையின் மூலம் மீனவர்களுக்கு மீன்படி உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீன்படி உரிமம் பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மீன் பிடித்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாத மீனவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, […]