தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளன. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், கூடுதலான பயணிகள் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு, போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது. வார இறுதி நாட்களான நேற்று தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 900 […]

பள்ளிகளில்‌ ஜூன்‌ 26-ம்‌ தேதி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும்‌ நிகழ்வு நடத்த வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் அனுப்பி உள்ள கடிதத்தில்; மாணவர்களின்‌ உடல்‌, மன நலனை காக்க மருத்துவ குழுக்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்‌, உரிய பரிசோதனைகளை செய்யவும்‌ இளைஞர்‌ நீதி சட்டம்‌, போக்சோ சட்டம்‌,சாலை பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான போதை பொருள்கள்‌ குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்தவும்‌ […]

தமிழகத்தில் வரும்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழ்‌ கட்டாயபாடம்‌ என்பதை தனியார்‌ பள்ளிகள்‌ சரியாக பின்பற்றுகிறார்களா, தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்களா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்‌ உறுதிபடுத்த வேண்டும்‌ என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 10-ம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்கள்‌ அனைவரும்‌ தமிழ்‌ பாடத்தை கட்டாயம்‌ படித்து இருக்க வேண்டும்‌ என சட்டம்‌ இயற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு முழுமையான செயல்‌வடிவம்‌ கொடுக்கும்‌ வகையில்‌, […]

நீலகிரி மாவட்டத்தில் ‘புதியன விரும்பு- 2023’ என்ற தலைப்பில், 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் மாணவர்களுக்கான, 5 நாள் பயிற்சி முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த ஆண்டு, 80,000 மாணவ, மாணவியர் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பம் பெற்றுள்ளனர். மாநிலத்தில் தொடக்க பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, 185 ஊராட்சிகளில் ஒவ்வொரு […]

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில், ஜுன் 1-ம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக […]

இது குறித்து நாமக்கல்‌ மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில்‌ மத்திய அரசின்‌ போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்‌ படி, நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ அனைத்து அரசு மற்றும்‌ அரசு ஆதிதிராவிடர்‌ நல மேல்நிலைப்‌ பள்ளிகள்‌, அரசு ஆதிதிராவிடர்‌ நல விடுதிகளில்‌ தங்கி பயிலும்‌ 12-ம்‌ வகுப்பு ஆதிதிராவிடர்‌ மாணவர்களின்‌ உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும்‌ வகையில்‌ ஆலோசனை வழங்கப்படும். தேர்ச்சி பெற்ற மற்றும்‌ தேர்ச்சி […]

தமிழகத்தில் வெயிலின்‌ தாக்கம்‌ அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூன்‌ 1-ம்‌ தேதி திறக்கப்படும்‌என பள்ளிக்கல்வித்‌ துறை சார்பில்‌ ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வெயிலின்‌ தாக்கம்‌ அதிகமாக உள்ள நிலையில்‌ பள்ளிகள்‌ திறப்பது தாமதமாகும் என தகவல்கள்‌ வெளியானது. இது குறித்து செய்தியாளர்கள்‌ எழுப்பிய கேள்விக்கு பதில்‌ அளித்த அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஜூன்‌ 1-ம்‌ தேதி 6-ம்‌ வகுப்பு […]

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு மாநில அரசுதான் கட்டணம் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீதம் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. சீருடை மற்றும் புத்தகங்களுக்காக 11,977 ரூபாய் கட்டணமாக செலுத்தக்கூடிய தனியார் பள்ளியின் உத்தரவை எதிர்த்த வழக்கில், RTE.ல் சேரும் மாணவர்களுக்கு சீருடை புத்தக கட்டணங்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டியது அரசின் கடமை இன்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தின் தபால் தலைப் பிரிவு கோடைக்கால தபால் தலை முகாமை நடத்த உள்ளது. மூன்று பிரிவுகளாக இந்த முகாம் நடைபெற உள்ளது. முதல் பிரிவு 11.05.2023 முதல் 13.05.2023 வரையும், இரண்டாவது பிரிவு 18.05.2023 முதல் 20.05.2023 வரையும், மூன்றாவது பிரிவு 25.05.2023 முதல் 27.05.2023 வரையும் நடைபெறும். இந்த முகாம் காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 வரை பயிற்சி நடைபெறும். […]