பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி அதில் உரையாற்ற உள்ளார். தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்னதாக ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.. மேலும் […]

உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் திரு. கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை காட்டுகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் நடந்த ஊழல் குறித்து அமலாக்கத்துறை மீண்டும் டிஜிபிக்கு கடிதம் அனுப்பி உள்ளது.. அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதலுக்கு  ரூ.365.87 […]

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி, தமிழ்நாட்டில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திமுக, எஸ்.ஐ.ஆர் பணி தொடர்பாக முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதாக அதன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாடு தழுவிய சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறையை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள நிலையில், ஆளும் கட்சியானது தமிழ்நாட்டில் கள அளவில் இந்தத் திருத்தப் பணிகளில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் […]

திண்டுக்கல்லில் ரூ.337.84 கோடி மதிப்புள்ள 111 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. ரூ.1,082 கோடியில் 2.66 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.. மேலும் திண்டுக்கல்லில் ரூ.174.20 கோடி மதிப்பிலான 212 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.. தொடர்ந்து இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ திண்டுக்கல், புரட்சி, எழுச்சி வீரத்தின் பெயர்.. இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் […]

2024-25-ம் ஆண்டுக்கான  C, D பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டக்கூடிய வகையில், பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை. வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி, அவர்தம் ஆற்றலையும் அறிவினையும் பெருக்கிட […]

நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் “ மூச்சுவாங்கும் அளவுக்கு இவ்வளவு மேஜர் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம்.. எந்த துறை எடுத்துக் கொண்டாலும் சாதனைகள்.. ஒன்றிய அரசு வெளியிடும் அறிக்கைகளில் நம்பர் 1 தமிழ்நாடு தான். இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? இது எனது ஓபன் சேலஞ்ச்.. தைரியம் இருந்தால் சொல்லுங்க..” என்று ஓபன் […]

ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டிடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், […]

அதிமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தல் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்திருந்தார்.. மேலும் திமுகவின் ஊழல் அமைச்சர்கள் உள்ளே போவார்கள் என்றும் கூறியிருந்தார்.. அவரின் இந்த கருத்துக்கு இயற்கை வளம், நீதிமன்றம், சிறைத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ”சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம்’ எனச் சோற்றுக்குள் பூசனிக்காயை மறைத்திருக்கிறார் பழனிசாமி. இரண்டு […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு […]