தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. கரூர் துயர சம்பவத்திற்கு பின் விஜய் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “ புதுச்சேரி அரசு தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு மாதிரி கிடையாது.. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர்.. அதற்காக புதுச்சேரி முதல்வருக்கு […]

ராமேஷ்வரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், சேராங்கோட்டையை சேர்ந்த ஷாலினி என்ற பெண் 12-ம் வகுப்பு மாணவியை முனிராஜ் என்ற இளைஞன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தன்னை காதலிக்குமாறு மாணவிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். வழக்கம் போல் இன்று பள்ளி சென்ற மாணவியை வழிமறித்து முனிராஜ் பேசியுள்ளார். மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். இதில் மாணவி […]

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.. அதன்படி இதுவரை 73 தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. அந்த வகையில் போடி நாயக்கானூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் உடன் […]

கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் சமீபத்திய தமிழ்நாட்டு வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த, பாதுகாப்பான பொதுக்கூட்டமாக இருக்க வேண்டிய நிகழ்வு, அமைதியற்ற குழப்பமாக மாறி, பல அப்பாவி உயிர்களை காவு கொண்டது. இதனால் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையே தளர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்கள் இன்னும் நீதி கேட்டு வருகின்றன. அதேசமயம், ஆட்சியில் இருக்கும் திமுக மற்றும் விஜய்யின் தவெக இரண்டு கட்சிகளிடமும் மக்களின் […]

தென்காசியில் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.. அப்போது திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் தென்காசிக்கான புதிய திட்டங்களையும் அறிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ மக்களை மகிழ்க்கவும், காக்கவே, இந்த ஆட்சி, மக்களை வளர்க்கவும், மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி.. இந்த நான்கையும் 4 ஆண்டுகளாக செய்து வருகிறோம்.. திமுக அரசுக்கு மக்கள் துணையாக இருப்பதால் சிலருக்கு தூக்கம் […]

மாமல்லபுரத்தில் திமுக வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.. அப்போது பேசிய அவர் “ 2026 தேர்தல் தமிழ்நாட்டின் தனித்தன்மையையும், சுய மரியாதையையும் காக்க வேண்டிய தேர்தல்.. இந்த தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டு.. உழைப்பை கொடுத்து லட்சியத்தை நோக்கி இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.. தொழில், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நம் […]

அரசின் தோல்விகளை மறைக்க எவ்வளவு மடைமாற்றினாலும் திமுகவுக்கு தோல்வி நிச்சயம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியைத் (SIR) தேர்தல் ஆணையம் துவங்கும் தகவல் வந்ததும் அலறும் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு வரலாற்றை நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் […]

கரூர் துயர சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று விரிவாக விளக்கம் அளித்தார்.. தவெகவினர் அனுமதி வாங்கியது முதல் அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.. அதே போல் ஆம்புலன்ஸ் ஏன் வந்தது? இரவில் உடற்கூராய்வு ஏன் செய்யப்பட்டது? என பல்வேறு கேள்விகளுக்கும் முதல்வர் விளக்கம் அளித்தார்.. இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் கரூர் சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.. […]