ஆன்லைன் விளையாட்டில் பல லட்ச ரூபாய் பணத்தை இழந்ததால் சினிமா கேமராமேன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறையை சேர்ந்த தேவதாசன்(40), கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி சினிமா கேமராமேனாக பணியாற்றி வந்தார். அவர் ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்து, கடன் ஏற்பட்டதால், நிலத்தை விற்று கடனை அடைத்துள்ளார். அதன்பிறகு மனைவி ஊரான பூத்துறை கோயில் வளாகத்தில் வந்து தங்கியிருந்தார். இந்நிலையில் […]

‌திருச்சி மாவட்டம் முசிறியை சார்ந்த பிளஸ் 2 மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சார்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் வர்ஷா வயது 20. கடந்த 2020 ஆம் ஆண்டு அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வந்த இவர் பாதியிலேயே தனது படிப்பை நிறுத்திவிட்டார். அதன் பிறகு 202-23 ஆம் […]

அரியலூர் அருகே இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் வேறொரு நபருடன் தொடர்பிலிருந்து பெண்ணை உறவினர்கள் அந்த நபரிடமிருந்து கூட்டி வந்த நிலையில் தனியாக இருந்த பெண் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலை கடம்பூர் என்ற கிராமம் உள்ளது இந்த கிராமத்தைச் சார்ந்த மணிவண்ணன் என்பவரது மகள் சத்யா வயது 28. இவருக்கும் விக்கிரமங்கலம் அருகே […]

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை வந்தவாசி அருகே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை வந்தவாசி அருகே உள்ள சத்தியவதி கிராமம் பாடசாலை வீதியைச் சார்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் தங்கராஜ் வயது 32. ஜேசிபி போன்ற கனரக வாகனங்களை இயக்கும் ஆப்பரேட்டராக இருந்து வந்தார். இவருக்கும் பகுதியைச் சார்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் இவரது மனைவியட்டும் மாத கர்ப்பமாக […]

சென்னையில் படிக்கச் சொல்லி கண்டித்ததால் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டு குளியல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியைச் சார்ந்தவர் பரிமளராஜ் இவருக்கு ஒரே மகன் ரிஷி. 14 வயதான ரிஷி அங்குள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். இவருக்கு நட்பு வட்டாரம் அதிகம் அதனால் எப்போதும் ஊர் சுற்றுவது ஆன்லைனில் […]

ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைந்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்காலங்களில் ஆன்லைன் வியாபாரம் மூலமாக பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பிட்காயின், டிரேடிங், பங்குச்சந்தை என எண்ணற்ற வழிகளில் மக்களிடமிருந்து பணத்தை மோசடி செய்வதற்கு கும்பல் தயாராகவே இருக்கிறது. இதே போன்ற ஒரு கும்பலிடம் தான் தனது முதலீட்டை இழந்திருக்கிறார். சென்னையிலிருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் […]

சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஆராய்ச்சி படிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்தவர் சச்சின் குமார் ஜெயின் இவர் சென்னையில் உள்ள ஐஐடியில் பி ஹெச் டி ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார் . இவர் தனது நண்பர்களுடன் வேளச்சேரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர் . இந்நிலையில் மார்ச் 31ஆம் தேதி […]

மதுரையில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடனால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமாக அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை அவனியாபுரத்தைச் சார்ந்த ஜெகதீஷ் என்ற இளைஞர் கோவையைச் சார்ந்த பிரகாஷ் என்பவரிடம் கடன் வாங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் அவரது பங்குகள் முழுவதுமாக சரிந்ததால் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து முழு பணத்தையும் இழந்திருக்கிறார் ஜெகதீஷ். கடன் கொடுத்த நபரும் அடிக்கடி போன் செய்து கடனை கேட்டு வந்திருக்கிறார் […]

பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த நுண்ணறிவுத்திறன் கொண்ட ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ரோபோட் உடன் பேசிக் கொண்டிருந்த ஒரு மனிதர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலகை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான நபர் எலிசா என்ற நுண்ணறிவு திறன் கொண்ட ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ரோபோவுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்நாட்டு […]

திருவள்ளூர் அருகே இன்ஸ்டா புகழ் சிறுமி தனது பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பம் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவியின் பெயர் கற்பகம். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். இவர்களது இளைய மகள் பிரதிக்ஷா ஒன்பது வயதான அந்தச் சிறுமியை அங்குள்ள பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். […]