தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில்; மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல. தமிழக பொது மக்களின் விருப்பமும் கூட. அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துகளையும் வகுத்துள்ளது. இதுகுறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தேன். இதுதொடர்பாக, […]
tasmac
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது மது அருந்துவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், விற்பனையாளர் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கடந்த வாரம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை நடப்பதாக பல புகார்கள் வந்துள்ளன. சமீபத்திய புகார்களை […]
இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில் 138 கடைகள் மூடப்பட உள்ளன. அதே போல காஞ்சிபுரம் வடக்கு பகுதியில்15 கடைகளும் மற்றும் தென் பகுதியில் 16கடைகளும் மூடப்பட உள்ளன. திருவள்ளூர் கிழக்கு பகுதியில் 32 கடைகளும், மேற்கு பகுதியில் 14 கடைகளும் மூடப்படவுள்ளன. […]
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தத்தங்குடியைச் சேர்ந்தவர் பழனி குருநாதன் (55). இவர் மங்கைநல்லூர் கடைவீதியில் தச்சுப் பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த புராசாமி (65) என்பவர் அவரது தச்சுப் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் நண்பர்கள்போல் பழகிவந்த நிலையில், இரவு நேரங்களில் மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரண்டு பேரும் வாந்தி மயக்கத்துடன் பட்டறையில் கிடந்துள்ளனர். இதை அறிந்த […]
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சின்னமுத்தூர் பகுதியில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வளர்ச்சி அடைந்துள்ளது. லஞ்சம் கொடுக்காமல் எந்த கோரிக்கையும் நிறைவேறாது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் கொலை கொள்ளை […]
விரைவில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்றும் ஒரு வாரத்தில் இது குறித்த முழு அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5,329 டாஸ்மாக் மதுக் கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த 500 கடைகளை இறுதி செய்யும் பணிகள் நிறைவடைய உள்ளது. […]
2024-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் நாள் கலைஞரின் நூற்றாண்டு நிறைவுக்குள் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். ”தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்பின் […]
தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் அரசு அனுமதி பெற்ற மது அருந்தும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் அருகே அரசு அனுமதியுடன் செயல்பட்டு வரும் மதுபான கூட்டத்தில் சட்டத்திற்கு புறமாக 12 மணிக்கு முன்னரே 2 பேர் மது வாங்கி அருந்தியுள்ளனர். இதில் ஒருவரான 60 வயதான குப்புசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்ட நிலையில் மற்றொருவரான விவேக் மயங்கி விழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த […]
இன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப். எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் டாஸ்மாக் மது பானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும், மேற்காணும் நாட்களில் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு […]
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழகத்தில் போதை பழக்கங்களை முற்றிலுமாக ஒழிக்கப் போவதாக தெரிவித்தது. ஆனால் தமிழகத்தின் போதை பொருட்களை ஒழிக்கப் போவதாக தெரிவித்துக்கொண்டு மறுபுறம் இளைஞர்களையும், இளம் தலைமுறையை சார்ந்தவர்களையும் போதைக்கு அடிமையாக்கி வருகிறது திமுக அரசு என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துவதற்கு ஏற்றார் போல தமிழக அரசு தற்போது தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த தானியங்கி […]