சாபங்கள் பல வகையாக இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது, அதிலும் குறிப்பாக 13 வகையான சாபங்கள் ஒரு மனிதனை பாடாய்படுத்தி எடுக்கும் என்றும் கூறுகிறது. அந்த வகையில் இந்த ஒரு சாபத்தை மட்டும் நாம் வாங்கி கட்டிக் கொள்ளவே கூடாது. இதனால் அடுத்தடுத்த சந்ததியினரையும் இந்த பாவமானது தொடருமாம். இந்த சாபங்கள் நம்மளை வாழ்க்கையில் முன்னேறவே செய்ய விடாதாம். 13 வகையான சாபங்களில் மிகவும் முக்கியமான இந்த சாபம், ‘பெண் சாபம்’ […]

ஸ்தூலம், சூட்சுமம், காரணம் ஆகிய மூன்று முறையிலும் அழகிய திருவடிவம், மகாமேரு, பீஜ மந்திர முறையில் வழிபடப்படுபவள் இந்த தேவி. 16 வகைப் பேறுகளையும் அளிப்பதால் இவள் சோடஷி எனப்படுகிறாள். பிரபஞ்ச மையத்தில் அமிர்த சாகரத்தின் மத்தியில் ஸ்ரீபுரம் எனும் ஸ்ரீசக்கர வடிவ நகரில், ராஜதர்பாரில் ரத்ன சிம்மாசனத்தில் ஸ்ரீஸ்ரீலலிதா திரிபுர ஸுந்தரி வீற்றிருக்கின்றாள். அவளைச் சூழ்ந்து அவளது மந்திரியான மாதங்கி, படைத் தளபதிகளான அஸ்வாரூடா, வராகி போன்ற சப்த […]

மயிலாடுதுறை மாவட்டம் லால் பகதூர் சாஸ்திரி நகரில் அமைந்துள்ளது பழமையான பிரசித்தி பெற்ற மன்மத காருண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குடமுழுக்கு விழா செய்ய அப்பகுதி  மக்கள் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து திருப்பணிகள் துவங்கப்பட்டு பணிகள்  நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் திருப்பணி பணிகள் அனைத்தும் நிறைவுற்றது.  அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான தேதி குறிக்கப்பட்டு கடந்த 3ஆம் தேதி கும்பாபிஷேக விழா விக்னேஸ்வரர் பூஜையுடன் […]

கேதார்நாத். இது உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற கேதாரீஸ்வரர் கோயில் உள்ளது. 12 ஜோதிர் லிங்கத்தில் இதுவும் ஒன்று. பருவநிலை மாற்றத்தை கருத்தில்கொண்டு, கேதாரீஸ்வரர் திருக்கோயிலானது வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். அதன்படி ஏப்ரல் மாதத்தில் பக்தர்களுக்காக திறக்கப்படும் இக்கோயில், அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது தீபாவளி கழித்து மூடப்பட்டு விடும். இத்திருக்கோயில் மூடப்படும் நாளில் தேவர்கள் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். ஆகவே […]

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அனைத்துச் சமூகத்தினரும் சாதிய பாகுபாடின்றி வழிபாடு செய்வதற்கான உரிமையைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதைத் தடுப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி தமிழகத்தில் இந்து சமய அறநிலயத்துறையின் கீழுள்ள 43,283 […]

மத்திய அரசு பட்ஜெட்டை தவிர புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ1,500 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. உலக நாடுகள் இந்தியா மீது மரியாதை வைத்துள்ளது. சமூகநீதியை பற்றி ஸ்டாலின், நாராயணசாமி பேசினார்கள் ஆனால் பிரதமர் மோடியின் சமூக நீதிக்கு உண்மையான எடுத்துக்காட்டு ஓ.பி.கமிஷனுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது தான், பட்டியலின மற்றும் சிறுபான்மை இனமக்களை குடியரசு தலைவராக்கி பாஜக அழகுபார்த்தது. சமூக நீதி பேசும் தமிழகத்தில் பட்டியலின மக்கள் கோயிலுக்கு போக […]

மதுரைக்கிளை பதிவாளர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மேலும் இந்த கோவில் திருவிழாக்களின் போது, எந்த தனிநபரும் கமிட்டி அமைக்க கூடாது என ஏற்கனவே 2017ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் […]

வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்தவகையில் கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை ஒட்டி பாலசுப்பிரமணியசுவாமிக்கு நேற்று காலை பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 108 லிட்டர் பாலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சிறப்பு […]

அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவடைவதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் 1,008 கலச பூஜை நடைபெற்றது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கி நாளையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்தது இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக அக்னி நட்சத்திர பரிகார நிவர்த்தியாக திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4ம் தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவடைவதையொட்டி, நேற்று இரவு 7 மணியளவில் முதல் […]

தமிழகத்தில் கும்பகோணம் சரகத்தில் உள்ள தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கின்ற பழமையான கோவில்களுக்கு சொந்தமான சேலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சிறப்பு தணிக்கை செய்து வருகிறார்கள். அந்த விதத்தில், கடந்த மாதம் 15 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் கொருக்கை கிராமத்தில் தர்மபுரம் நிர்வாகத்தில் உள்ள அருள்மிகு விரட்டேஸ்வரர் திருக்கோவிலில் சிலை கடத்தல் தடிப்பு பிரிவு காவல்துறையினர் […]