தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் அசோக்குமார்(29) இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவருடைய உறவினரான ராணுவ வீரர் சுரேஷ்(27) என்பவருக்கும் இடையே வெகுகாலமாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே வழக்கறிஞர் அசோக்குமாருக்கு ஆதரவாக அவருடைய பெரியப்பா துரைராஜ்(57) என்பவர் பேசி வந்ததால் ஆத்திரம் கொண்ட ராணுவ வீரர் சுரேஷ் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் […]
Tenkasi
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் அப்துல் வகாப், கடையநல்லூர் நகராட்சி 6வது வார்டு திமுக கவுன்சிலரான இவர் தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் காரில் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் துபாயில் வேலை பார்த்து வரும் கடையநல்லூரை சேர்ந்த ஷேக் உதுமான் என்பவரிடம் வீட்டுமனை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து கவுன்சிலர் அப்துல் வகாப் […]
தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (25) என்ற இளைஞருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் அந்த இளைஞர் தனது திருமணமானதை மறைத்து 17 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை தெரிவித்து வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தான் தன்னுடைய மகளை காணவில்லை என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் […]
கடைய நல்லூர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்ற நபர் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு ஊர் திரும்பிய நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி அலுவலகம் உள்ளிட்ட தொகுதிகளில் அவர் புகார் மனு ஒன்றை வழங்கி இருந்தார் அதில் பாலகிருஷ்ணன் என்பவர் தன்னை தொடர்பு கொண்டு தமிழக சிபிசிஐடி காவல் துறையில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கின்ற நுண்ணறிவு உளவு பிரிவில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி தன்னிடமிருந்து […]
தன் ஊரில் இருக்கும் பல ஏழை இளைஞர்களையும் ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி மையம் நடத்தி வந்தவரின் 5 வயது மகன் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து இறந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணாபுரம் நாட்டாமை தெருவை சார்ந்தவர் சிவன் மாரி. இவருக்கு இந்திய ராணுவத்தின் மீது அளவு கடந்த பற்று உண்டு. அதன் காரணமாகவே தனது […]
தென்காசி அருகே ஜாமீனில் வெளியே வந்த நபர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஊர் தேவிபட்டனம். இந்த ஊரைச் சார்ந்த கருப்பையா என்பவரது மகன் செல்வகுமார் வயது 40. இவர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த பதினொன்றாம் தேதி தான் சிறையில் இருந்து ஜாமீனில் […]
தென்காசி மாவட்டத்தில் பாமக மகளிர் அணி தலைவி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சார்ந்தவர் முத்தையா. இவரது மகள் மாரியம்மாள். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் குருவிகுளம் யூனியன் மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவில் இலவன்குளம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார் மாரியம்மாள். […]
தென்காசி அருகே குழம்பு ருசியாக இல்லாததால் தகராறு செய்த கணவனின் செயலால் மனம் உடைந்த மனைவி எடுத்த முடிவு அப்போது உள்ளவர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் செங்கனூர் பகுதியைச் சார்ந்த தொழிலாளி விஜய பாண்டியன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இவரது மனைவியின் பெயர் மகேஸ்வரி வயது 29 . சம்பவம் நடந்த தினத்தன்று பணியிலிருந்து வீட்டிற்கு வந்த விஜய பாண்டியன். மனைவியிடம் […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சார்ந்த லாரி டிரைவர் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நகரை சார்ந்தவர் கண்ணன் இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி சுமதி இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதிவிட்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த […]
தென்காசி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியம். இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவ்வப்போது பாலியல் சீண்டல்களிலும் இரட்டை அர்த்த வசனங்களிலும் பேசி வந்ததாக தெரிகிறது. இதே போன்ற வேலையை இவர் 30க்கும் மேற்பட்ட […]