fbpx

தென்காசி  மாவட்டம்,  கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(வயது 47). இரண்டு தினங்களுக்கு முன்பு, இரவு நேரம் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயமடைந்து சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய …

தென்காசி மாவட்டத்தில் மதுபாட்டிலில் ‘ஈ’ செத்துக் கிடந்ததை பார்த்து குடிமகன் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

டாஸ்மாக் கடையில் சுகாதாரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கடந்த காலங்களில் மது பாட்டில்களில் பல்லி, …

தென்காசி அருகே 65 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் 72 வயது முதியவரை கைது செய்துள்ளனர். தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முப்புடாதி(65). கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் தனது வீட்டின் அருகே ஆடைகள் இன்றி …

தென்காசி மாவட்டத்தில் தாய் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மகன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் கொலையாளியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஞானமுத்து இவரது மனைவி ராமலட்சுமி(65). இவர்களது மகனான சங்கரநாராயணன்(43) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் …

காதலியின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்து நண்பர்களின் உதவியோடு, கிணற்றில் வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதாவது, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்த மனோரஞ்சித் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் …

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் அசோக்குமார்(29) இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவருடைய உறவினரான ராணுவ வீரர் சுரேஷ்(27) என்பவருக்கும் இடையே வெகுகாலமாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆகவே வழக்கறிஞர் அசோக்குமாருக்கு ஆதரவாக அவருடைய பெரியப்பா துரைராஜ்(57) என்பவர் பேசி வந்ததால் ஆத்திரம் …

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் அப்துல் வகாப், கடையநல்லூர் நகராட்சி 6வது வார்டு திமுக கவுன்சிலரான இவர் தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் காரில் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.

அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் துபாயில் வேலை பார்த்து வரும் கடையநல்லூரை சேர்ந்த …

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (25) என்ற இளைஞருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் அந்த இளைஞர் தனது திருமணமானதை மறைத்து 17 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை தெரிவித்து வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் தான் …

கடைய நல்லூர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்ற நபர் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு ஊர் திரும்பிய நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி அலுவலகம் உள்ளிட்ட தொகுதிகளில் அவர் புகார் மனு ஒன்றை வழங்கி இருந்தார் அதில் பாலகிருஷ்ணன் என்பவர் தன்னை தொடர்பு கொண்டு தமிழக சிபிசிஐடி காவல் துறையில் புதிதாக …

தன் ஊரில் இருக்கும் பல ஏழை இளைஞர்களையும் ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி மையம் நடத்தி வந்தவரின் 5 வயது மகன் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து இறந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணாபுரம் நாட்டாமை தெருவை சார்ந்தவர் சிவன் மாரி. இவருக்கு …