44வது செஸ்‌ ஒலிம்பியாட்‌ போட்டியின்‌ நிறைவு விழாவின்‌ போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ கபடி, சிலம்பம்‌ உட்பட 15 விளையாட்டுகளில்‌ பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசுஊழியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும்‌ என அறிவித்தார்கள்‌. அந்த வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ பிப்ரவரி 2023ம்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ தொடங்கி மார்ச்‌ 2023ம்‌ மாதம்‌ முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான […]

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இளைஞர்களுக்கு பயனுள்ள வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கும்‌ தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கிடவும்‌, 2023-ம்‌ ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள ஸ்ரீ குமர குரு பாலிடெக்னிக்‌ கல்லூரி வளாகத்தில்‌ அரூர்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சியில்‌ 07.06.2023 வரை சேர்க்கை நடைபெற்று வருகிறது. வயர்மேன்‌ பிரிவிற்கு 8-ம்‌ வகுப்பிலும்‌, ரெப்ரிஜிரேசன்‌ & AC டெக்னீசியன்‌,பிட்டர்‌, மெக்கானிக்‌ ஆட்டோபாடி ரிப்பேர்‌ […]

NLC India Limited இல் காலியாக உள்ள Nurses, Paramedics உள்ளிட்ட பணிக்கு காலி இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  பணியின் விபரங்கள் ஆண் செவிலியர் உதவியாளர் – 36 காலி பணியிடங்கள் பெண் செவிலியர் உதவியாளர் – 22 காலி பணியிடங்கள் மகப்பேறு உதவியாளர் – 05 காலி பணியிடங்கள் ஆயுர்வேதம் உதவியாளர் – 04 காலி பணியிடங்கள் ரேடியோகிராபர் – 03 காலி பணியிடங்கள் லேப் […]

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள தட்டச்சர், உதவி மின் பணியாளர், காவலர் மற்றும் பெருக்குபவர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 7 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 45 ஆகும். மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் நன்றாக தெரிந்தால் போதுமானது. பணிக்கு நேர்காணல் […]

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், நாளை முதல் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், நாளை முதல் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து […]

கோவில்களில் நடத்தப்படும் இலவச திருமண திட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டமாகும்.. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் என்பது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கோவில்களில் நடத்தப்படும் […]

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வரும் 24-ம் தேதி நடைபெறும் முகாம் நடைபெறும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம், மூன்றாம், நான்காம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. தற்போது 24 அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி […]

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். ஆணையர்‌, வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறை சென்னை அவர்களின்‌ ஆணைப்படி 8ம்‌ வகுப்பு தேர்ச்சியுடன்‌ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள்‌ 10ம்‌ வகுப்பு தமிழ் மற்றும்‌ ஆங்கில மொழி பாடங்களில்‌ தேர்ச்சி பெற்றால்‌ 10ம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழும்‌ 10ம்‌ வகுப்பு தேர்ச்சியுடன்‌ […]

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, டிரைவா் மற்றும் கணிணி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் கலந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட தகுதியுள்ள தனியாா் துறையில் […]

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு அதிகாரி எனும் பொறுப்பில் அரசு ஒருவரை நியமனம் செய்கிறது. இவர் தலைமையிலான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு இல்லாமல் இருபவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அவருடைய கல்வி மற்றும் இதர தகுதிகள் பதிவு செய்து வைக்கப்படுகின்றன. மாவட்ட அரசுப் […]